Wednesday, March 15, 2006

8.அன்புடைமை

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

அன்புஇலார் எல்லாம் தமக்குரியர் அன்புஉடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

அன்போடு இயைந்த வழக்குஎன்ப;ஆர் உயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.

அன்புஈனும் ஆர்வம் உடைமை;அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.

அன்புஉற்று அமர்ந்த வழக்க்குஎன்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்;
மறத்திற்கும் அஃதே துணை.

என்பு இலதனை வெயில்போலக் காயுமே
அன்பு இலதனை அறம்.

அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்காண்
வற்றல் மரம்தளிர்த்து அற்று.

புறத்துஉறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துஉறுப்பு அன்பு இலவர்க்கு.

அன்பின் வழியது உயிர்நிலை;அஃதுஇலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

No comments: