Wednesday, March 15, 2006

5.இல்வாழ்க்கை

இல்வாழ்வான் என்பான் இயல்புஉடைய மூவர்க்கும்
நல்ஆற்றின் நின்ற துணை.

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.

தென்புலத்தார், தெய்வம், விருந்துஒக்கல் தான்என்றுஆங்கு
ஐம்புலத்துஆறு ஒம்பல் தலை.

பழிஅஞ்சிப் பாத்துஊண் உடைத்துஆயின் வாழ்க்கை
வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

அன்பும் அறனும் உடைத்துஆயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

அறத்துஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்துஆற்றில்
போஒய்ப் பெறுவது எவன்.

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.

ஆற்றின் ஒழுக்கி, அறன்இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.

அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை ஆஃதும்
பிறன்பழுபது இல்லாயின் நன்று.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உரையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

No comments: