Wednesday, March 15, 2006

3.நீத்தார் பெருமை

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுபத்து
வேண்டும் பனுவல் துணிவு.

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிகொண் டற்று.

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

உரனென்னும் தோட்டியான் ஒர்ஐந்தும் காப்பான்
வரன்என்னும் வைப்பிற்குஒர் வித்து.

ஐந்துஅறிவித்தாள் ஆற்றல் அகல்விசும்பு உளார்கோமான்
இந்திரனே சாலும் கரி.

செயற்குஅரிய செய்வார் பெரியார்:சிரியர்
செயற்குஅரிய செய்கலா தார்.

சுவைஒளி ஊறுஒசை நாற்றமென்னு ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

குணம்என்னும் குன்ஏறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டு ஒழுக லாள்.

No comments: