மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்கைத் துணை.
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின்,வாழ்க்கை
எனைமாட்சித்து ஆயினும் இல்.
இல்லதென் இல்லவள் மாணபானால்,உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.
பெண்ணின் பெருத்தக்க யாஉள,கற்புஎன்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதுஎழுவாள்
பெய்யெனப் பெய்யுன் மழை.
தற்காத்துத் தற்க்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்வுஇலான் பெண்.
சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.
பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழுன் உலகு.
புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
மங்கலம் என்ப மனைமாட்சி;மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கள் பேறு.
No comments:
Post a Comment