Wednesday, September 26, 2007

பொறுக்கி எடுத்து பொருத்த முடியாமல்

பொறுக்கி எடுத்து பொருத்த
முடியாமல் கிடக்கிறது
என் பாசத்திற்கு உன்
வெகுமானம் அவமானம் என்றால்
தாராளமாக தாங்கிக் கொள்கிறேன்
உன் மீது நான் கொண்ட
பாசத்திற்காக வாதாடுவது
அது உனக்கு விளையாட்டு
அது எனக்கு வலி அதற்காக
நான் உன்னோடு வழக்காட வரவில்லை.
உன்னால் மௌனித்து போன
மனசு மரணித்து கிடக்கிறது.
இனியும் சொல்ல ஏதும் இல்லை அண்ணா
மௌனத்தை தவிர இனியும் என்ன
இருக்கிறது நமக்கிடையில்???????

தீபா

1 comment:

Anonymous said...

பொறுக்கி எடுத்து பொருத்த ஆட்கள் தேவை படுகிறதா?