Friday, August 31, 2007

இரண்டில் ஒன்று சொல்லிவிடு

என்மனம் அவிழ்த்துகொட்டுகிறேன்
மூடிய உன் இதயத்தின் மீது
உன் மீது எனக்கிருக்கும் காதல்
என்மீது எனக்கில்லாமல் போனது
உன் விழிப்புன்னகையும்
இதழ் முறைப்பும்
எனக்கு விளங்கவில்லை
உன் இதயக்கல்லில்
தீட்டிய வார்தைகள் உனக்கு ஆயுதம்
என் மனம் எரிக்கும்
மௌனம் எனக்கு ஆயுதம்
என்னுள் கொதிக்கு
ம்உன்னை எப்படி தணிக்கபோகிறேன்
என் வலிகளுக்கு
நீ தரும் காயங்கள் ஆணியப்போகிறேன்
காதல் சொல்ல தவறினாலும்
என் கண்ணீர் உறிஞ்சத்தவறுவதில்லை நீ
இரண்டில் ஒன்று சொல்லிவிடு
என் காதலை ஏற்றுக்கொள் அல்லது
என் காதலை ஏற்றுக்கொள்

Wednesday, August 22, 2007

அனுமதி

கண்களின் அனுமதி கேட்டா
நான் உன்னைப் பார்த்தேன்??
இதயத்தின் அனுமதி கேட்டா
நீ உள்ளே வந்தாய்??
நம் இருவரின் அனுமதி கேட்டா
காதல் நம்முள் வந்தது?
இப்பொது யார் அனுமதி கேட்டு
என்னை நீ பிரிந்தய்?

white star

Tuesday, August 21, 2007

கவலைவிடு ஆன்ட்டி

என்றேனும் உன்வீட்டிற்கு
வருவேன் நான்
உன் குழந்தைகளிடம்
என்னை சொல்லி
அறி முகப்படுத்துடுவாய்
சித்தியா?அத்தையா?
கான்வென்ட் குழந்தைகளா
கவலைவிடு ஆன்ட்டிஎன்றழைக்கட்டும்....

இராஜி

Sunday, August 19, 2007

கடலில்

கடலில்
சேர்ந்த நீர்
மீண்டும்
நதியாகுமா...
உன்னில்
கலந்த
என்மனம்
திரும்பிவருமா...
white star

Thursday, August 16, 2007

காதலிக்கவில்லை

நீ எவ்வளவு தான்
சென்னாலும்
என்க்குப் புரியவே
இல்லை
நீ என்னைக்
காதலிக்கவில்லை என்று........
white star

Thursday, August 09, 2007

ஆறு வருட காதலும் ஆறுவரி கவிதையும்

பெண்ணே!
ஆறு வருடங்களுக்கு முன்பு...
உன்னை பார்த்த போது...
இழந்தேன் என் மனதை.

அதன் பின்...
இரவுகளில்...
இழந்தேன் என் தூக்கம்.

உன்னைப்பற்றி மட்டும்...
சிந்தித்தாதில்..
.இழந்தேன் என் கல்வி.

என்னிடம் முதன் முதல் நீ...
பேசிய போது...
இழந்தேன் என் மொழி.

நீ, இன்னொருவனை...
கல்யாணம் கட்டிய போது...
இழந்தேன் என் காதல்.

நீயும் என்னை...
காதலித்த போது...
இழந்தேன் என் துக்கம்.

இப்படி, உன்னாலே நான்..
இழந்தது பல பல..
இவை அதிலே ஒரு சில.

அன்பே!
என் கடைசி பரிசாக..
இந்த ஆறு வரிக் கவிதையை...
உனக்குத் தந்துவிட்டு...
இழந்திடவா என் உயிரை?

தெரியாமல் போனதே!

உயிரே உன்க்காக!
உறங்காத இரவுகள் எத்தனையோ?
நிம்மதி இல்லாது!
நினைவற்ற ஜடமாய்!
நான் வாழ்ந்த நாட்கள் எத்னையோ?

அலைகடல் போல்!
ஆசை அலைகளை என்!
மனதில் சுமந்த!
வேதனைகள் தான் எத்தனையோ?

உன் பருவ அழகை!
உள்ளம் கண்டு என்!
இதயம் வாடிய!
நாட்கள் தான் எத்தனையோ?

உன்னை காணும் பாக்கியம் இல்லாத!
துயரத்தில் கண்கள்!
கண்ணீர் சிந்தும்!
நாட்கள்தான் எத்தனையோ?

ம மாற்றம் ஏன்?
உன்னிடம் ஏற்பட்டது!
காரணம் அறிய முயன்ற எனக்கு!
ஏற்பட்ட தோல்விகள் தான் எத்தனையோ!

கற்பனை யுகத்தில் உன்னை!
கனவுக் கன்னியாக!
நெஞ்சில் வரைந்து!
எங்கிய நாட்கள் தான் எத்தனையோ?

கவியரசு_பி

Tuesday, August 07, 2007

என்னவனே.........

என் இதயம் உன்னைச் சேர்ந்ததால்
என் ஆத்மம் உன்னையே தொடர்வதால்
நீயே சொல்லிவிடு
எது வரை நீளப்போகின்றது
உன் மெளனம்........?
அதுவரை காத்திருக்குமா
என் மரணம்..............?

ஜனனி

உன்னுடன்

உன்னுடன்
கைகோர்த்து
நடந்தபோது கூட
நான்
சலனப்பட்டதில்லை
நீ பிரிந்தபோதுதான்
லேசாய்.....

இராஜி

Monday, August 06, 2007

பாதரசம்

பாதரசம் என்பது
எதிலுமே ஒட்டாது!!!!
நீயும் பாதரசமாகிறாய்
என் விஸயத்தில்
மட்டும்!!!!

white star

ரோஜாக்கள்

உனக்காக நான்
வாங்கிய ரோஜாக்கள்
அனைத்தும் இரங்கல்
கூட்டம்
போடுகின்றன...

White star

Sunday, August 05, 2007

தாஜ்மஹால்

எனக்காக தாஜ்மஹால்
கட்டுவேன் என்றாய் நீ...
உனது தாஜ்மஹாலில்
எனது காதலை
நீ புதைத்த போது
புரிந்து கொண்டேன்
தாஜ்மஹால்
ஒரு பெண்ணின்
சமாதி என்பதை...

white star

Saturday, August 04, 2007

தைரியமிருந்தால்

தைரியமிருந்தால்
உன் மனைவிடம் சொல்
என் புகைப்படம் காட்டி
"உன்னைப்போல் இவளும்
என்னிடம் அன்பு
காட்டியிருக்கிறாள்"

இராஜி

Friday, August 03, 2007

தண்டனை

என் இதயத்தைத்
திருடியது நீ...
அதற்காக தனிமைச்
சிறையில்
தண்டனை பெறுவது
நானா....?

white star

சுகமானது.........

பேசாதே அன்பே...
உன் வார்த்தைகளை
விட
உன் மெளனங்கள்
சுகமானது.....

white star

முதன் முதலாய்......!

என் உயிரினுள் முதன்
முதலாய்
நூழைந்தவன் நீ!
என் இதயத்தினுள் முதன்
முதலாய்
நிறைந்தவன் நீ!
என் மன்தில் முதன்
முதலாய்
படர்ந்தவன் நீ!
என்னை விட்டு முதன்
முதலாய்
பிரிபவனும் நீ!
white star

காதல் சிரிப்பு

அன்று நீ..
இருந்த போது
என் சிரிப்பை மிகவும்
ரசிப்பாய்........

இன்று நீ
சென்று விட்டாய்
நீ ரசித்த சிப்பையும்
எடுத்து கொண்டு.....

அழகு

நான் அழகாய்த்
தெரிவதால் நீ என்னைக்
காதலிக்கிறாயா?
இல்லை
நீ என்னைக் காதலிப்பதால்
நான் அழகாய்த்
தெரிகிறேனா?
white star

Thursday, August 02, 2007

கண்ணீர்

வானத்தின் கண்ணீர்
பூமிக்கு மழையானது.....
பூமியின் கண்ணீர்
புற்களில் பனித்துளியானது.....
எனது கண்ணீர்
உனக்கான கவிதை ஆனது......

white star

எங்கே சென்றாய்...

நீ தந்த முத்தத்தின்
ஈரம் கூட காயவில்லை
அதற்குள் எங்கே
சென்றாய்
என்னை விட்டு...

White star

Wednesday, August 01, 2007

நீ.....!

நீ நான் கீறிய
நீர்ச் சித்திரம்
அல்ல...
என் உயிருக்குள்
செதுக்கிய
உயிர்ச் சிற்பம்...

நன்றி
காதல்.காம்

அடியே....

அடியே....
உன்னை நிலவென்று
வர்ணித்து வர்ணித்தே
தேய்ந்து போனேன்
நான்....