Thursday, May 25, 2006

மண்டல குழுக்கள்(ZONAL COUNCILS)

பொருளாதார திட்டமிடலுக்காக இந்தியா 5 மண்டலங்களாக பிரிக்கப்
பட்டுள்ளது. அவையாவன.
அ. வடக்கு மண்டலம்-ஹரியானா, பஞ்சாப்,ராஜஸ்தான்,ஜம்மு
காஶ்மீர் மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் போன்றவற்றை
உள்ளடக்கியது.
ஆ.தெற்கு மண்டலம்- ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, கேரளா
மற்றும் கர்நாடகா.
இ. மத்திய மண்டலம்- உத்திர பிரதேசம்,மற்றும் மத்திய
பிரதேசம்.
ஈ. கிழக்கு மண்டலம்- பீகார், மேற்கு வங்காளம், அசாம்
மணிப்பூர்,திரிபுரா,மேகலாயா,நாகலாந்து மிசோரம்,
அருணாச்சல பிரதேசம்.
உ. மேற்கு மண்டலம்- மாராஶ்டிரம்,குஜராத் மற்றும் கோவா.

Wednesday, May 24, 2006

கூட்டாட்சி(FEDERAL SYSTEM)

இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சி தத்துவத்திலானது. கூட்டாட்சி அமைப்பு அதிகாரத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளிடையே பகிர்ந்தளிக்கிறது. ஒவ்வொரு மாநிலமும் தன்னிச்யையானது. மத்திய மாநில அரசுகளுக்கான பிரச்சினைகளுக்கு தீர்வு காண தன்னிச்சை பெற்ற நீதிமன்றம் உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசாங்களின் சட்டபூர்வமான அதிகாரங்கள் அரசியலமைப்பின் எழாவது அட்டவணையில் மூன்று பட்டியல்களில் கொடிக்கப்பட்டுள்ளது. அவை மத்திய பட்டியல்(CENTRAL LIST) மாநில பட்டியல்(STATE LIST) மற்றும் இணை பட்டியல்(CONCURRENT LIST) ஆகும். மத்திய பட்டியல் 91 துறைகளையும், மாநில பட்டியல் 61 துறைகளையும், இணை பட்டியல் 51 துறைகளையும்(ஆதாரம்:INDIAN CONSTITUTION -M.V.PYLEE)கொண்டுள்ளது. பாராளுமன்றம் மத்திய பட்டியலிலுள்ள துறைகளையும் பாராளுமன்றமும் சட்டமன்றமும் இணைந்து இணை பட்டியலிலுள்ள துறைகளையும், மாநில சட்த மன்றம் மாநில பட்டியலிலுள்ள துறைகளையும் கட்டுபடுத்த சட்டம் வகுக்கிறது.
இந்திய அரசியலமைப்பின் ஶரத்து(SHARATTHU) 256 மாநில அரசுகள் பாராளுமன்றம் இயற்றிய சட்டங்களுக்கு உட்பட்டு அரசு அதிகாரங்களை செயல்படித்த வேண்டும். மேலும் மத்திய அரசு மாநிலங்களுக்கு அரசு கொள்கையின் வழிகாட்டு விதிகளை வெளியிடவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஶரத்து(SHARATTHU) 262 மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் மற்றும் பள்ளதாக்குகள் தொடர்பான சட்டங்களைக் கூறுகிறது.
இந்த ஶரத்தின்(SHARATTHU) கீழ் பாராளுமன்றன் இரு மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பங்கீடு போன்ற தாவாக்களை தீர்க்கலாம். மேலும் ஜனாதிபதி தேவைப் பட்டால் இரு மாநிலங்களுக்கு இடையிலான குழுவை அமைக்கலாம்.
அரசியல்லமைப்பின் படி ஒரு நிதிக் குழு(FINANCE COMMISION) உருவாக்கப்பட்டுள்ளது. அது சில இனங்களிலிருந்து கிடைக்கும் வருவாயை மாநிலங்களுக்கிடையே பகிர்ந்தளிக்க உதவுகிறது. வரவினங்கள் இரு விதத்தில் ஒதுக்கப்படுகின்றன. அவையாவன் அ.மத்திய மற்றும் மாநில அரசுகளிடையேயான ஒதுக்கீடு. ஆ.மானியம் மற்றும் மாநில உதவியாக மாநிலங்களுக்கான ஒதுக்கீடு.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரவினங்கள் பற்றி நீண்ட பட்டியல் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. நிதிக் குழு தலைவர் மற்றும் இதர உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அமைப்பு ஆகும்.

உயர் நீதிமன்றம்(HIGH COURT)

ஒரு மாநிலத்தின் மாநில அளவிலான உயர்ந்த நீதிமன்றம் உயர் நீதிமன்றமாகும். இது தலைமை நீதிபதியையும் இதர நீதிபதிகளையும் அங்கமாகக் கொண்டது. இந்த நீதிமன்றத்திற்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் நீதிபதிகள் கிடையாது. ஜனாதிபதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மாநீல ஆளுநரின் ஆலோசனையின் பேரில் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கிறார்.

மாநில சட்ட மன்றம்(STATE LEGISLATURE)

மாநில சட்த மன்றம் ஆளுனரையும், ஒன்றோ அல்லது இரண்டோ
அவைகளையும் (சட்ட சபை, மேலவை) கொண்ட அமைப்பு ஆகும். மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அரசியலமைப்பு படி சட்டமன்றத்தின் குறைந்த பட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை 60 அதிக பட்ச எண்ணிக்கை 500 ஆகும். மாநில மேலவையின் குறைந்த பட்ச எண்ணிக்கை 40 க்கு குறையாமலும் அதிக பட்சமாக மொத்த சட்ட மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்று ஒரு பங்குக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

Tuesday, May 23, 2006

மாநில ஆளுநர்(GOVERNOR)

மநிலத்தின் அதிகாரங்களனைத்தும் ஆளுநரிடமே உள்ளது. இவர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்.இவர் ஜனாதிபதியின் நம்பிக்கையை பெறும் வரை ௫ ஆண்டுகள் பதவியில் தொடர்கிறார். ௩௫ வயதைக் கடந்த எந்த ஒரு பிரஜையும் மாநில ஆளுநராக நியமிக்கப் படலாம். இவர் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினராக இருக்க முடியாது.

ராஜ்ய சபா(மேல்சபை)(RAJYA SABHA)

இந்த அவையின் அதிக பட்ச உறுப்பினர்கள் எண்ணிக்கை 250
ஆகும். 238 பேர் மாநிலங்கள் மற்றும் மாநிலப் பிரதேசங்களிலிருந்து
தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இலக்கியம், விஞ்ஞானம், கலை மற்றும்
சமூக அறிவியல் போன்றவற்றில் சிறந்த 12 பேர் ஜனாதிபதியால்
நியாமனம் செய்யப்படுகின்றனர். ராஜ்யசபா உறுப்பினர்கள் மாநில
சட்ட மன்ற உறுப்பினர்களால் மக்கள் தொகை அடிப்படையில்
விகிதாச்சார முறைப்படி ஒற்றை மாற்று வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். ராஜ்ய சபா ஒரு நிரந்தர அமைப்பு. மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவி விலகுகின்றனர். முப்பது வயதுக்கு குறையாத இந்திய பிரஜைகள் எவரும் ராஜ்ய சபா உறுப்பினராகலாம். தற்போதைய ராஜ்ய சபாவின் எண்ணிக்கை 244 இதில் 232 உறுப்பினர்கள் மாநில சட்ட சபைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்.

Monday, May 22, 2006

லோக்சபா(கீழ்சபை)(LOK SABHA)

இதன் உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். இவ் அவையின் அதிகபட்ச உறுப்பினர்கள் எண்ணிக்கை 552 ஆகும். இதில் 530 உறுப்பினர்கள் பல
மாநிலங்களிலிருந்தும் 20 உறுப்பினர்கள் மாநிலப் பிரதேசங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.மேலும் இருவர் ஆங்கிலோ இந்திய பிரஜைகளிலிருந்து ஜனாதிபதியால் நியமிக்கப் படுகிறார். இருபத்தைந்து வயதுக்கு குறையாத எந்த ஒரு சாதாரண இந்திய பிரஜையும் இந்த அவையின் உறுப்பினராகலாம். லோக்சபாவின் காலம் 5 ஆண்டுகள் ஆகும். தற்போதைய 13 வது லோக் சபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 545 (மாநிலங்களிலிருந்து 530, மாநிலப் பிரதேசங்களிலிருந்து 13, ஜனாதிபதியால் நியமிக்கப் பட்டவர்கள். 2)

உச்சநீதிமன்றம்(SUPREME COURT)

சிவில் மற்றும் கிரிமினல் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்கும் தகுதி கொண்ட இந்தியாவின் உயர்ந்த நீதிமன்றமே உச்ச
நீதிமன்றமாகும். இது தில்லியில் உள்ளது. இது தலைமை நீதிபதி மற்றும் 25 இதர நீதிபதிகளை அங்கமாக கொண்டது. ஒவ்வொரு நீதிபதியும் 65 வயது வரை பதவியில் தொடரலாம். நீதிபதிகள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்றனர்.

Sunday, May 21, 2006

பாராளுமன்றம்(PARLIAMENT)

இந்திய பாரளுமன்றம் இரட்டை அவை முறை (BICAMERALISAM) முறைப்படி(லோக்சபா மற்றும் ராஜ்ய சபா) உருவாக்கப்படுகுறது. பாராளுமன்றம் ஜனாதிபதியையும் இரண்டு அவைகளையும் உள்ளடக்கிய அமைப்பாகும்.

Saturday, May 20, 2006

ஜனாதிபதி

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இந்திய அரசின் முடிவுகளை- செயல் திட்டங்களை செயல் படுத்தும் அதிகாரம் பெற்ற ஒருவரே ஜனாதிபதி ஆவார். இவரே நாட்டின் பாதுகாப்பு படைகளின் (முப்படைகளின்) தலைவர் ஆவர். பாராளுமன்றத்தின் லோக்சபாவிற்கு போட்டியிட தகுதி வாய்ந்த 35 வயது நிரம்பிய எந்த ஒரு இந்திய பிரஜையும் இந்திய ஜனாதிபதி ஆவதற்கு தகுதி வாய்ந்தவர் ஆவார். ஜனாதிபதி 5 ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்.ஜனாதிபதி தேர்தலில் கீழ்க் கண்டோர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்.

அ.பாரளுமன்றத்தின் ஒரு அவைச் சார்ந்த உறுப்பினர்கள்.
ஆ.மாநில சட்ட சபைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்.

ஜனாதிபதி கீழ்க் கண்டோரை நியமிக்கிறார்:-

அ.பிரதமரு மத்திய அரசின் இதர மந்திரிகளும்.
ஆ. மத்திய அரசின் வழக்கறிஞர்
இ.மத்திய அரசின் தலைமை கணக்காயர்.
ஈ.மாநில ஆளுனர்கள்.
உ.உச்ச நீதி மன்ற மற்றும் உயர் நீதி மன்ற நீதிபதிகள்.

இந்திய ஜனாதிபதி கீழ்க் கண்ட மூன்று விதமான காரணங்களல் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தலாம்.
அ.போர் காரணமான நெருக்கடி (ஶரத்து 352)
ஆ.மாநிலங்களின் அரசியல் நெருக்கடி (ஶரத்து 356)
இ.நிதி நெருக்கடி (ஶரத்து 360)

திரு.அப்துல் கலாம் இந்தியவின் தற்போதைய ஜனாதிபதி ஆவார்.

இந்திய பாரளுமன்றத்தின் இரு அவைகளைச் சார்ந்த உறுப்பினர்களாலும் உதவி ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப் படுகிறார். இவர் மக்கள் தொகை அடிப்படையில் விகிதாச்சார முறைப்படி ஒறறை வாக்கு மூலம் 5 ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார். ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிட தகுதி வாய்ந்த 35 வயதைச் கடந்த இந்திய பிரஜைகள் உதவி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதி வய்ந்தவர்களாகும். திரு ஶெகாவத் தற்போதைய உதவி ஜனாதிபதி ஆவார்.

பிரதமரும் மற்ற மந்திரிகளும் ஜனாதிபதிக்கு ஆலோசனைகள் கூறி இந்திய அரசு செயல்பட உதவுகின்றனர். பிரதமரை ஜனாதிபதியே நியமிக்குறார். இது அமைச்சர்களை பிரதமரின் ஆலோசனையின் பேரில் ஜமாதிபதி நியமிக்கிறார்.
பாராளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களும் அமைச்சர்களாக நியமிக்கப் படலாம். உறுப்பினர்களாக இல்லாதவர்கள் அமைச்சர்களாகவோ பிரதமராகவோ நியமிக்கப்பட்டால் 6 மாதங்களுக்குள் இரு அவைகளில் ஏதேனும் ஒன்றில் உறுப்பினராக வேண்டும். பிரதமருக்கு தமது மந்திரி சபையை மாற்றி அமைக்க உரிமை உண்டு.மூன்று விதமான் அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

அ. முழு அதிகாரம் கொண்ட காபினெட் அமைச்சர்கள்.
ஆ. இராஜாங்க அமைச்சர்கள்.
இ. துணை அமைச்சர்கள்.

Friday, May 19, 2006

இந்திய அரசியமைப்பு

இந்திய அரசியமைப்பு சட்டத்தை அறிமுகம் செய்து
அதன் தேவையையும், குறிக்கோள்களையும் கூறுகிறது.இந்திய

அரசியலமைப்பின் முன்னுரை பின்வருமாறு:

"We, the people of India,
having solemnly resolverd to constitute India into a
sovereing socialistic, secular Democratic Republic
and to secute to all its citizens:
Justice, social economicand politicals,
Liberty of thought, expression, belief, faith and woraship:
Equality of status and of opportunity;
And to promote among them all
Fratemity assuring the dignity of the individual
and the unity and integrity of the nation:
In our constituent assembly this twenty-sixth day of November 1949
Do our hereby adopt, enact, and give to ourselves this constitution.

இந்திய அரசியலமைப்பின் அடிப்படைத் தத்துவங்களாவன மக்களின்
, மக்களின் அரசுரிமை வயது வந்தோருக்கு வாக்குரிமை அரசு வம்ச
ஆட்சி முறை ஒழிப்பு, உச்ச நீதி மன்ற அமைப்பு, தீண்டாமை ஒழிப்பு
தனியுரிமை ஒழிப்பு, சமத்துவம்,மதசார்பின்மை பொதுவுடைமை
குடியுரிமை.

இந்தியா அபார வெற்றி

ஜமைக்கா ஒருநாள் போடி: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி.
இந்த முதல் ஒருநாள் போட்டியில் ராகுல் டிராவிட் (105)ரன்களும் முகமது கைபின் (66) ரன்கள் அபார ஆட்டத்தால் இந்தியா ௫ விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு புள்ளி பெற்று முன் நிலையில் உள்ளது.
மழை காரணம்மாக 45 ஓவர் கள் கொண்டு இந்த போட்டி நிர்ணக்கப்பட்டன.டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது.
கேப்டன் பொறுப்பு ஏற்றதிலிருந்து சிறப்பாக செயல்பட்டு அணி வீரர்களுக்கு முன்னுதாரணமாக விரர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கி வரும் ராகுல் டிராவிட் நேற்று அபாரமாக பேட் செய்தார். அவர் நேற்று 99 பந்துகளில் சதமடித்தார்.ஒரு நாள் போட்டிகளில் இது அவரது 12 வது சதமாகும்.

Tuesday, May 16, 2006

அடிப்படை உரிமைகள்


இந்திய அரசியலமைப்பின் மூன்றாம் பகுதி ஶாத்து 12 முதல் 35 வரை இந்திய பிரஜைக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளைக் கூறுகிறது அவையாவன

1.சமத்துவ உரிமை(ஶாத்து 14,15,16,17,18,மற்றும் 19)
2.சுதந்திர உரிமை(ஶாத்து 19 முதல் 22)
3.சுரண்டல்களிலிருந்து பாதுகாக்கப்பட உரிமை (ஶாத்து 23,24)
4.எந்த மதத்தையும் பின்பற்ற உரிமை(ஶாத்து 15 முதல் 28 வரை)
5.கல்வி மற்றும் கலாச்சார உரிமை (ஶாத்து 29, 30)
6.சொத்து உரிமை (ஶாத்து 31,31A,31B,31C,31D)
7.அரசியலமைப்பு மூலம் பரிகாரம் பெறும் உரிமை (ஶாத்து32.32அ)

Saturday, May 13, 2006

தென்னிந்தியக் கூட்டணியை

  • பாளையக்காரர்களின் புரட்சி எந்த ஆண்டு வெடித்தது?
    விடை: கி.பி.1799
  • கட்டபொம்மன் எதிர்த்துப்போரிட்ட ஆங்கில தளபதி?
    விடை: மேஜர் பானர்மேன்.
  • எங்கு கட்டபொம்மனை தூக்கிலிட்டனர்?
    விடை: கயத்தார்.
  • பாளையக்காரர்களின் புரட்சிக்கு மற்றொரு பெயர்?
    விடை: தென்னிந்தியப் புரட்சி.
  • கட்டபொம்மனுடைய சகோதரர் யார்?
    விடை: ஊமைத்துரை
  • கட்டபொம்மனுக்கு தூக்குதண்டனை விதித்து தீர்ப்பளித்த ஆங்கிலேய கலெக்டர்?
    விடை: கலெக்டர் ஜாக்சன்.
  • தென்னிந்திய புரட்சி யாரால் நிர்வகிக்கப்பட்டது?
    விடை: மருதுபாண்டியன்.
  • திண்டுக்கல் கூட்டிணைப்பின் தலைவர்?
    விடை: கோபால் நாயக்கர்.
  • தென்னிந்தியாவை ஜம்புதீவின் தீபகற்பம் என கூறியவர்?
    விடை: மருது பாண்டியன்.
  • ஆங்கிலேயருக்கு எதிராக முதல் தென்னிந்தியக் கூட்டணியை உருவாக்கியவர்?
    விடை: புலித்தேவர்.

Thursday, May 11, 2006

சூடான முத்தங்கள்

சூடான முத்தங்கள்
அன்று உன்னை எண்ணி
நான் வடித்த கவிதைக்கு
இன்று என்
கண்ணீர் கொடுப்பது!

காதல் பாடம்

உன் நினைவுகளை
அழிக்கின்றேன்...
றப்பரால் அல்ல
என் கண்ணீரால்!

Friday, May 05, 2006

இன்றய அரசியல்

அரசியல் என்பது சுயநலத்திற்க்காகவா?
அல்லது
பொது நலத்துக்காகவா?
அரசியல் என்பது சாக்கடையா?
அல்லது
சாக்கடையாக மாற்றப்பட்டதா?
தேர்தலில் வெற்றி அடைந்த கட்சிகள் இடும் சட்டம் மக்களுக்காகவா?
அல்லது
சுயநலத்துக்காகவா?
முந்தய அரசியல் மக்களுக்கு நன்மையாக இருந்தா?
அல்லது
இன்றய அரசியல் மக்களுக்கு நன்மை செய்கின்றதா?
அரசியல் பணம், பதவி ஆசை கொண்டதா?
அல்லது
மக்கள் ஆசை கொண்டதா?
இன்றய அரசியல் மக்கள் நலம் கொண்டதா?
அல்லது
சுயநலம் கொண்டதா?
இன்றயா அரசியல் பழி உணர்ச்சிக் கொண்டதா?
அல்லது பாச உணர்ச்சிக் கொண்டதா?
இன்றய அரசியலில் தேர்தல்லுக்கு என்று செலவிடும் பணம் கட்சி பணம்மா?
அல்லது
மக்கள் பணமா?
இன்றய அரசியல் இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்குகின்றதா?
அல்லது
முட்டுக்கட்டையா இருக்குகின்றதா?
மக்கள் ஆட்சி என்பது முழுமையான மக்கள் நலன்னா?
அல்லது
மக்களின் உரிமையை பறிக்கும் கொள்ளை கூட்டத்தின் அமைப்பா?

சிந்திக்க வேண்டும் நமது சிந்தனைகளை முடக்க பலவிதமான கட்சிகள் எடுத்திருக்கும் ஆயுதம் என்ன என்றால்? சலுகைகள் எப்படி எனறால் எங்கள் கட்சி தேர்தலில் வெற்றி அடைந்தால் நாங்கள் மக்களுக்கு நிறையா இலவசமான நன்மைகளை செய்து தருகிறோம் என்று வாக்கு அளித்து சிந்திக்க வேண்டிய தருணங்களில் மக்களை திசைதிருப்புவது அரசியல் சூழ்ச்சி என்றுதான் கூற வேண்டும்.

Wednesday, May 03, 2006

அரசியல் சதி

நாட்டை ஆட்சி செய்கின்ற பெயரில் நாட்டையே சுடுகாடாக மாற்றும் காட்டு ஓநாய்கள் கூட்டம் இன்றும் அரசியல் என்ற பெயரில் மக்களை சகதியில் தள்ளும் அரசியல் சதிக்காரர்களாக நடமாடுகின்றனர். என்றுதான் தணியும் இந்த அரசியல் தாகம்.இந்த கொள்ளை கூட்டத்தின் பிடியில் சிக்கித் தவிக்கின்றது இன்றைய தமிழகம்.இந்த கயவர்கள் பெரும்பாலும் மக்களை கவருவதற்கு சலுகைகள் என்ற ஆயுதம் எடுத்து மக்களை பலியிட துணிகின்றனர் இந்ததுணிச்சலை யார்? அவர்களுக்கு அளித்தது. யாரும் இல்லை மக்களாகிய நாம்தான் தேர்தல் சமயம் மக்கள்ளாகி நாம் இருக்கின்ற கட்சிகளை எவ்வாறு மதிப்பிட்டு வாக்களித்தேம். வாக்களித்த கட்சி ஆட்சிக்கு வந்தால் என்நாட்டிற்க்கு என்ன நன்மை தரும் என் வீட்டிற்கு என்ன நன்மை தரும் என்று சிந்திக்காமல் வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டு அளித்து அப்படிப்பட்ட கயவர்களை இத்தனை காலம் சுகந்திரமாக இந்நாட்டில் உலாவ விட்டது போதும். இனியும் மக்களாகி நாம் சிந்தித்து வாக்களிக்காவிட்டால் பணம் ஆசை கொண்ட இந்த பூதங்களிடம் இருந்து வருங்கால இந்தியாவை காக்க யார் முன்வருவார்கள்.சிந்தனை என்பது இறைவன் தந்த வரம். ஆனால் தேர்தல் நோரங்களில் மக்களை சிந்திக்க விடாமல் பல சலுகைகளை வழங்குகிறேம் என்று மக்கள் சிந்தனைகளை சிதறடிகச்செய்யும் கயவர்களை துரத்தியடித்து நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடும் நல் உள்ளம் படைத்த தலைவர்களை தேர்ந்து எடுத்து அவர்களை வெற்றி மேடையில் அமர்த்துவது மக்கள்ளாகி நமது கடமை.

Tuesday, May 02, 2006

பாஞ்சாலங்குறிச்சி

  • சிறையில் 63 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த இந்தியப் புரட்சித் தலைவர்?
    விடை: ஜட்டின் தாஸ்.
  • வேதங்களை நோக்கி திரும்பி செல்லுங்கள் என கூறியவர்?
    விடை: தயானந்த சரஸ்வதி.
  • கி.பி.19-ம் நூற்றாண்டில் இளம் வங்காள இயக்கத்துக்கு ஊக்கமளித்தவர்?
    விடை: ஹென்றி விலியன் டிரோசியோ.
  • இந்திய மறுமலர்ச்சியின் விடிவெள்ளி என அழைக்கப்படுபவர்?
    விடை: ராஜாராம் மோகன் ராய்.
  • யாருடைய ஆட்சியில் சென்னை, கல்கத்தா மற்றும் மும்பாய் பல்கலைகழகங்கள் நிறுவப்பட்டது?
    விடை: டல்ஹௌசி பிரபு.
  • பிரிட்டிஶ் காலனி ஆதிக்கத்தின் விளைவு?
    விடை: நவீன இயந்திரங்களும் தொழிற்சாலைகளும் அறிமுகம்.
  • குதிராம் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆங்கில அதிகாரி யார்?
    விடை: ரான்ட்.
  • எந்த காங்கிரஸ் மாநாட்டில் கதர் இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது?
    விடை: பனாரஸ் மாநாடு.
  • ஆங்கில ஏகாதிபத்தியத்தை முதலில் எதிர்த்த தமிழ்நாட்டைச் சார்ந்தவர்?
    விடை: கட்டபொம்மன்.
  • கட்டபொம்மன் ஆட்சி செய்த பகுதி?
    விடை: பாஞ்சாலங்குறிச்சி.