Saturday, November 25, 2006

பேசும் விரல்கள்


அன்பே
உன்னை எண்ணி
நான் அனவரதமும்
எழுதிக் குவித்த கவிதைகள்
எடுத்துக் கூற வேண்டுமானால்
என் விரல்களைக் கேட்டுப்பார்.
எழுதிய அவைக்குத் தெரியும்
என் இதயத்தின் ஓசைகள்.

Wednesday, October 25, 2006

Cricket World Cup 2007 schedule Based on the following groups (ranking in brackets):

Based on the following groups (ranking in brackets):

Group A

St Kitts & Nevis

1.Australia (1)

2.South Africa (5)

3.Scotland (12)

4.Holland (16)

Group B

Trinidad & Tobago

1.Sri Lanka (2)

2.India (8)

3.Bangladesh (11)

4.Bermuda (15)

Group C

St. Lucia

1.New Zealand (3)

2.England (7)

3.Kenya (10)

4.Canada (14)

Group D

Jamaica

1.Pakistan (4)

2.West Indies (6)

3.Zimbabwe (9)

4.Ireland (13)

Tuesday, October 17, 2006

எக்செலில் தேதியையும் நேரத்தையும் நுழைக்க

கேள்வி:எக்செலில் தேதியையும் நேரத்தையும் நுழைக்க ஶார்ட்கட் கீகள் இருப்பதுபோல் வேர்டில் உண்டா?

பதில்: Alt+Shift+D கீகளை அழுத்தினால் தேதியும், Alt+Shift+T கீகளை அழுத்தினால் நேரமும் கிடைக்கும்.

Thursday, September 28, 2006

காரண காரியங்களை ஆராயும் பகுத்தறியும் திறன்[REASONING ABILITIES]

பகுத்தறியும் திறன் சிந்தனை சக்தியைப் பயன்படுத்தி, ஒரு முடிவினை எடுக்கும் செயலாகும்.

இத்திறன்தான் மனிதனை, மக்களிடமிருந்து வேறுபடுத்துகிறது.

பகுத்தறியும் திறன் இரு வகைப்படும்
1.மொழி பகுத்தறிதல்{Verbal Reasoninig}
2.மொழியல்லாத பிறபகுத்தறிதல்{Non-verbal Reasoning}
1.மொழி பகுத்தறிதல்[verbal Reasoning]
வாய்மொழி பகுத்தறிவு மேலும் கீழ்கண்ட பிரிவுகளில் அடங்கும்
1.ஒப்புமை
2.இனவாரியாக பிரிவுகளில் அடங்கும்
3.எழுத்துவரிசை
4.இரகசிய/சங்கேத பொருள் அளித்தல்/பெறுதல்
1.ஒப்புமை.[ANALOGY]
ஒப்புமை என்பது ஒரே போலிருப்பது, பொருந்துவது அல்லது சம்பந்தப்படுவது என்று பொருள்படும்

இதற்கான வினாக்களில் இரண்டு பொருள் கொடுக்கிறேன். வார்த்தைகளுக்குகிடையேயுள்ள

தொடர்பை பொருத்தத்தை சம்பந்தத்தை புரிந்து கொண்டு இதே தொடர்பிலான ஜோடியை

கண்டுபிட்க்க வேண்டும்.

உங்களுக்காக

தொடர்புகளின் வகைகள்[Kinds of Relationships]
1.கருவியுன் அளவையும்
2.வெப்பமானி-வெப்பம்
3.ஈரமானி ஈரப்பதம்
4.அம்மீட்டர்-மின்னோட்டம்
5.சீஸ்மோகிராப்-நிலநடுகம்

அளவும் அலகும்

பொருள் கிலோகிராம்
விசை நீயூட்டன்
ஆற்றல் ஜுல்
திறன் -வாட்

தனிப்பொருளும் கூட்டமும்:-
1.மாலுமி:கூட்டம்[Sailors:Crew]
2.ஆடு:மந்தை[Cattle:Herd]
3.பூக்கள்:பூங்கொத்து[Flowers:Bouquet]
4.திராட்சை: கொத்து[Grapes:Bunch]
5.செம்மறியாடு:மந்தை[Sheep:Flock]
6.தேனீக்கள்:கூட்டம்[Bees:Swarm]
7.மனிதன்:கூட்டம்Man:Crowd]
8.கள்வர்:கும்பல்[Robber:Gang]
9.கலைஞர்:குழாம்[Artist:Troupe]


தொடரும்...................................

Wednesday, August 30, 2006

குடியுரிமை(CITIZENSHIP)

இந்திய அரசியலமைப்பின் இரண்டாம் பகுதி குடியுரிமையைக் கூறுகிறது இந்திய அரசியலமைப்பு ஒற்றை மற்றும் சம குடியுரிமையைக் கூறுகிறது 1955- ம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்திய குடியுரிமை சட்டம்(Indian Citizenship Act 1955) ஒருவர் இந்திய பிரஜையாக கீழக்கண்ட ஐந்து வழிகளைக் கூறுகிறது.

அ. பிறப்பின் மூலம்
ஆ. தலை முறையாக
இ. பதிவு செய்வதன் மூலம்
ஈ. இயற்கையாக
உ. பிறபகுதி இந்தியாவின் ஒரு பகுதியாக இணைக்கப்படுவதன் மூலம்

இதே போல இந்திய அரசியலமைப்பின் படி ஒரு இந்திய குடிமகன்(Citizen) கீழ்க் கண்ட மூன்று சூழ்நிலைகளில் இந்திய நாட்டுரிமையை(Nationality) இழக்கிறார் அவையாவன:-
அ.துறத்தல் மூலம்.
ஆ.முடித்துக் கொள்வதன் மூலம்.
இ.அரசே பறித்துக் கொள்வதன் மூலம்.

Monday, August 28, 2006

ஆயுள்காலம்(Longevity)

ஆயுள்காலம் அல்லது வயது உச்சவரம்பு என்பது புதியதாக
பிறக்கும் குழந்தை அங்குள்ள வயதை அடிப்படையாக கொண்ட
இறப்புவிகிதங்களை சார்ந்து வாழும் சராசரி வாழ்நாள் ஆகும்.
எனவே ஆயுள்காலம் ஒரு நல்ல சமூக-பொருளாதார குறிப்பான்
ஆகும்.

Friday, August 25, 2006

அரசின் கட்டுபாடும், சட்டதிட்டங்களும்

மக்கள் தொகைபொருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் மக்களிடம் விளிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசு அசுர வேகத்தில் பல சட்டங்களும் பொதுகூட்டங்களும் எற்படுத்தியது இத்தகைய செய்தி திமும் பத்திரிக்கைகள் வானெலி, தொலைக்காட்சி மற்றும் பலவிதமான தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் இன்றும் மக்களுக்கு சென்று அடையும் வண்ணம் அமைந்து உள்ளது. இத்தகைய வளர்சிகளைன் மூலம், தகல் தொடர்பின் முன்னேற்றம் எவ்வளவே வெற்றிக்கண்டு உள்ளது. இப்படிப்பட்ட காலக்கட்டத்தில் வாழ்து கொண்டு இருக்கும் நம் நாட்டு மக்களூக்கு அரசு மக்கள் தொகையை கட்டுப்படுத்த எடுக்கும் முயற்ச்சிகள் எப்படி தொரிந்துவிடாமல் இருக்கும். கண்டிபாக அவர்கள் அறிந்து கொள்ளும் அளவிற்க்கு இன்றய தகவல் தொடர்பு அமைந்து உள்ளது. எனவே அரசின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மக்கள் முழுக்க முழுக்க அறிந்தவர்களே. இருப்பினும் அரசு மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்க்கு எடுக்கும் வழிகளை கைக்கொள்ளுவது இல்லை மக்கள். எனவே தான் நான் ஆணிதரமாக செல்லுக்கிறேன் மக்களின் அறியாமை அல்ல காரணம் மக்கள் தொகைபொருக்கத்திற்க்கு அறிந்தும் அறியாதவர் போல் நடிப்பதே மக்கள் தொகை பொருக்கத்திற்குக் காரணமாக அமைகின்றது.முன்னதாகா அளிக்கப்பட்ட பதிவில் ராஜகுமார் கூறியது அனைத்தும் தவறு என்று கூறி விடை பெற்றுக்கொள்கிறேன் நன்றி. பிரவின் குமார்.

Monday, August 21, 2006

மாற்றம்


தன்மானம்
வைராக்கியம்
என்னிடமும் இருந்தன....
உன்னைக்
காணும்வரை!

Monday, August 07, 2006

மாநில அமைச்சரவை(STATE COUNCIL OF MINISTERS)

மாநில ஆளுநர் முதலமைச்சரை நியமிக்கிறார். மேலும் முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் இதர அமைச்சர்களை நியமிக்கிறார்.அமைச்சர்கள் ஆளுநரின் சம்மதம் இருக்கும் வரை அமைச்சரவையில் தொடரலாம்.

Friday, August 04, 2006

கவிதை

எனக்கு தெரியும்
நீ விரும்புவது என்னையல்ல.........
என் கவிதைகளைத் தான் என்று...............
ஆனால் உனக்கு தெரியுமா
உன்னை விரும்புவது
என் கவிதைகளல்ல
நான் தான் என்று!!!!

Sunday, July 16, 2006

உலகமக்கள் தொகை

உலக மக்கள் தொகை 600 கோடியை தாண்டிவிட்டது. இப்படியே மக்கள் தொகை பெருகிக்கொண்டி இருப்பதற்க்கு அறியாமைதான் காரணம் என்று நான் கூறுகிறேன். (எ.கா) நம் நாட்டை எடுத்து கொள்வேம் இன்னும் படிப்பறிவு இலலாத மக்கள் எவ்வளவே நபர்கள் இருக்கின்றனர். பள்ளி கூடங்கள் இல்லாத எத்தனையே கிரமங்கள் இருக்கின்றனர். மலைபிரதேசங்களில் வாழும் மலைவாசிகள் நாட்டு நடப்பை அறிந்து கொள்ள இயலாத மக்கள் இன்னும் இந்திய நாட்டில் பல லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு எல்லாம் மக்கள் தொகை பெருக்கத்தை பற்றி யார் அறிவிப்பது அல்லது அரசின் திட்டங்களைதான் யார் தெரிவிப்பது. கடவுள்தான் தெரிவிக்க வேண்டும். ஏன் ஏனில் இங்கு எந்த விதமான தகவல் தொடர்புகளும் கிடையாது. எங்காவது ஒருசில இடங்களில் சில தகவல் தொடர்புகள் இருந்தாலும் அதைஅறிந்து கொள்ள வேண்டிய மனநிலையில் அப் பகுதி மக்கள் இல்லை. அரசும் இவ்வித மக்களின் அறியாமையை நீக்க எந்த நடவடிக்கையும் எடுத்தது போல் இலலை. எனவே அறியாமைத்தான் மக்கள் தொகை பெருக்கத்திற்க்கு காரணம் என்று கூறுகிறேன். ராஜகுமார்.

Friday, July 14, 2006

மக்கள் தொகை

மக்கள் தொகை இன்றய இந்தியாவின் வளர்ச்சின் முட்டுக் கட்டையாக இருக்கும் ஒரு தடை கல் ஆகும். பொருளதாரவளர்ச்சிக்கு மட்டும் அல்ல இது இடையூராக இருக்கின்றது. ஒவ்வொரு துறையின் வளர்ச்சிக்கு தடையாகவ்ய்ம் அமைகின்றது. ராஜகுமரர்.

Thursday, July 13, 2006

மனித சக்த்தி

வியப்பூட்டும் விந்தைகள் பல வகைகள். இவைகளை எல்லாம் என்னை போல் ஒரு மனிதன் செய்து முடித்து இருக்கிறான் என்றால் அதிசயம், ஆச்சரியம் நான் நினைபது உண்டு இது போல் அறிஞர்கள் விஞ்ஞானியாக பிறந்திருக்க கூடதா என்றும் ஏங்கி தவித்தநாள்களும் உண்டு.முலிகை எரிபொருள் வரைக்கும் கண்டுபிடிக்க தெரிந்த நம் நாட்டுவல்லுநர்களுக்கு நம் நாட்டின் மக்கள் தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை கண்டுக்கொள்ள முடியவில்லியா? முடியவில்லை என்றால் பொய். எத்தனையே அதிசங்கள் நாம் நினைத்து பார்க்க முடியாத சாதனைகளை நிகழ்த்தியவர்களுக்கு இது எல்லாம் சதரண காரியம் தான் இந்தவிசயத்தில் கற்றுஉணர்ந்த வல்லுனர்கள் மட்டும் நினைத்தால் முடியாத காரியம் இது.இருந்தாலும் அவர்கள்வகுக்கும் திட்டங்களுக்கு மக்கள்ளாகிய நாம் கட்டுப்பட்டு இருந்தால் இந்த மக்கள் தொகை பொருக்கத்தை ஒர் அளவுக்காவது குறைத்து இருக்கலாம்.

இதற்க்கு நம் நாட்டின் அறியாமை தான் முதல் காரணம் என்றுக் செல்லுகின்றேன்.
இதற்க்கு எனது நாண்பர் பிரவின் குமார் இப்படிப்பட்ட அனைத்து தகவல் களையும் அறிந்தும் மக்கள் அக்கட்டுப்பாடில் நடக்கவில்லை என்றுக் கூருகின்றார். இதைப்பற்றிய எங்கள் இருவர்குள் ஒரு உரையாடலை உங்கள் குறிஞ்சித்தமிழ் என்ற இணையத்தளத்தில் காணலாம். விரைவில்.......................

Tuesday, July 11, 2006

Transparent GIFஃபைலை பெயின்ட்சாப் புரோவில் எப்படி உருவாக்குவது?

கேள்வி: Transparent GIFஃபைலை பெயின்ட்சாப் புரோவில் எப்படி உருவாக்குவது?

பதில்:GIF ஃபைலைபெயின்ட்ப் புரோவில் திறந்து கொள்ளுங்கள். படத்தின் பின்புற வண்ணத்தை, டிரான்ஸ்பரன்டாக
மாற்ற விரும்புகிற வண்ண்த்துக்கு Dropper டூலை பயன் படுத்தி
மாற்றுங்கள். File=>save As கட்டளையை கொடுங்கள். Save as type என் பதில் GIF
என்பதைத் தேர்வு செய்து Options பட்டனை அழுத்துங்கள் Set the transparency value to the background color என்பதைத்
தேர்வு செய்து ஓகே, பின்பு Save பட்டனை அழுத்துங்கள்.

Friday, July 07, 2006

இரக்கம்

தபால்காரனுக்கு கூட என் மீது
இரக்கம் இருக்கிறது
எவர் வீட்டு கடிதத்தையாவது
என் வீட்டில் போட்டு
தற்காலிக மகிழ்ச்சியாவது தருகிறான்
நீ தான் இரக்கமில்லாமலே இருக்கிறாய்
எனக்கு வரவேண்டிய கடிதத்தை
இன்னும் எழுத தொடங்காமல்!!

கடி

"ஏங்க, நாம கல்யாணம் கட்டிக்கிட்டா என்ன?"

"ஐயோ, நான் பார்க்க அழகாவே இல்லியே!"

"அதனாலென்ன, நாள் முழுக்க நீங்க ஆபீஸ்லதானே இருப்பீங்க?"

Thursday, July 06, 2006

சிரிச்சு...சிரிச்சு

1."நீ காதலிக்கிற முதல் ஆண் நான்தானே கண்ணே?"

"கிட்டத்தட்ட அப்படியே தான்!... நான் காதலிச்ச முதல் ஆள் மாதிரியேதான் இருக்கீங்க"

2."பொன்னம்மா! கேட்டியா கதையை! என் புருசன் ஆபீஸ்ல ஒரு டைப்பிஸ்ட் பெண் பின்னாடி சுத்தறாராம்!"

"அடப்பாவி மனுஶா! அப்படியா சங்கதி! வரட்டும் இன்னிக்கு...இருக்கு..."

(படித்தவை)

Wednesday, July 05, 2006

2006-ம் ஆண்டின் இந்திய அழகி

2006-ம் ஆண்டின் இந்திய அழகி-Neha Kapoor
http://www.sudarshini.com/gall/displayimage.php?album=32&pos=0
Neha Kapoor 000
Neha Kapoor 001
Neha Kapoor 002
Neha Kapoor 003
Neha Kapoor 004
Neha Kapoor 005
Neha Kapoor 006
Neha Kapoor 007
Neha Kapoor 008
Neha Kapoor 009
Neha Kapoor 010

WHY IS THE "MONA LISA"SMILLING

Leonardo Da Vinci painted the Mona Lisa on a piece of pine wood in the year 1506.
Never in the history of Art has one painting been so admired. This is due largely to the enigmatic smile, which has caused much speculation. He recorded in his notebooks the records of model sittings; but nowhere can be found any records of the Mona Lisa model sitting. Why is that? Who posed for him?DR: LILLIAN SCHWARTZ Labs suggests that Leonardo painted himself, and was able to support her theory by analyzing the facial features of Leonardo's face and that of the famous painting, She digitized both the self-portrait of the artist and the Mona Lisa. She flipped the self portrait and merged the two images together using a computer. She noticed the features of the face aligned perfectly! You may draw your own conclusion. Please leave feedback in our guestbook.

Lillian Schwartz is a pioneer in computer graphics and computer art. Her work is represented in major art collections and museums around the world, and has been exhibited at the Museum of Modern Art, the Metropolitan Museum of Art, the Whitney Museum of Art, the Moderna Museet in Stockholm, the Georges Pompidou, Centre Beauborg, and Grand Palais museums in Paris. A frequent lecturer at universities throughout North America, she has been visiting or adjunct professor at Kean College, the University of Maryland, New York University, Princeton University, Rutgers University and the School of Visual Arts. For many years she has been a consultant in computer graphics at ATT&T's Bell Labs. In her book The Computer Artist's Handbook she presents the problem construct: Who is really portrayed in Leonardo Da Vinci's "Mona Lisa"?

This book is considered Drawing On the Right Side of the Brain for the computer age, which shows the non artist how a computer can unleash creativity, and the artist how to use it to make new kinds of art. This eye-opening book covers concepts, techniques and applications across a whole range of artistic media and disciplines, from drawing and painting through graphics, animation, and video to computer-controlled art and computerized analysis of the art of the past. With helpful analogies to traditional art forms and a rich array of up-to-the-minute advice and examples; it offers a conceptual and hands-on approach that can be used with any computer from the home PC with simple paint and draw programs to an elaborate graphic workstation. Published by W.W.Norton, 1992 New York, London.

தேசியச் சின்னங்கள்(National Symbols)

இந்தியாவின் தேசியச் சின்னன் சாரநாத்தில் உள்ள அசோக ஸ்தூபியிலிருந்து எடுக்கப்பட்டதாகும். நான்கு சிங்கங்களில் ஒன்று மறுபுறத்தில் இருப்பதால் பார்க்கமுடிவதில்லை. அவற்றின் கீழே ஒரு தேர்ச்சக்ரமும் இடையே சீறிபாயும் குதிரைகளும், காளைகளும் பொறிக்கப்பட்டுள்ளன,1950-ம் ஆண்டு ஜனவரி 26-ம் நாள் இந்திய அரசால் தேசியச் சின்னம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

Tuesday, July 04, 2006

என்ன வகை யு.எஸ்.பி?

யு.எஸ்.பி(USB-Universal Serial Bus) என்பது கம்ப்யூட்டரை வேறு சாதனங்களுடன் வேகமாகத் தகவல் பரிமாறச் செய்திட தற்போது பயன்படுத்தப்படும் சாதனமாகும்.
இது பயன்படுத்த எளியதானது.செயல்பாட்டில் வேகமானது.பல்வேறு சாதனங்களை இதன் வழி பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது வடிவமைக்கப்படும் கம்ப்யூட்டர்களில் நிச்சயமாக ஒன்று அல்லது இரண்டு யு.எஸ்.பி போர்ட்டுகள் அமைக்கப்படுகின்றன.பழைய கம்ப்யூட்டர்களில் யு.எஸ்.பி.1.0அல்லது 1.1. இருக்கும்.புதிய கம்ப்யூட்டர்களில் யு.எஸ்.பி. 2 இருக்கும்.
சரி, நம் கம்ப்யூட்டரில் எந்த வகை யு.எஸ்.பி. போர்ட் இருக்கிறது என எப்படி அறிந்து கொள்வது? அது ஒன்றும் கடினமான வேலை இல்லை. "My Computer"ல் வலது பக்கமாகக் கிளிக் செய்திடவும். பின்வரும் மெனுவில் "Properties"என்பதைத் தேர்ந்தெடுக்கவும். (அல்லதுControl Panel சென்று அதில் System என்ற பகுதிக்குச் செல்லவும். அதில் என்ற டேபைத் தேர்ந்தெடுக்கவும்.அதில் "Hardware" என்பதைக் கண்டறிந்து அதனை விரித்தால் என்ன வருகிறது என்று பாருங்கள்.அதில் "Enhanced" என்று வந்தால் அது யு.எஸ்.பி 2 ஆகும். இல்லை என்றால் அது வேகம் குறைந்த யு.எஸ்.பி 1.0 அல்லது 1.1 ஆகும்.

Monday, July 03, 2006

மேகம்

ஏன் அழுகிறாய்?
நீ தூது விட்ட
மேகங்கள்
பாதி வழியிலே
மழையாய்
கரைந்தற்கா??

Tuesday, June 27, 2006

(அ)நியாயம்

என்னடி இது நியாயம்?
என் இதயத்தை திருடியவள் நீ,
தனிமை சிறையில்,
தண்டனை பெறுவது நானா?

Thursday, June 22, 2006

COMMON ABBREVIATIONS

AA -Automobile Association, Anti Aircraft.
A.B.C. -Atomic Biological and Chemical (Werfare)
A.D.B. -Asian Development Bank
A.I.D.S. -Acquired Immune Deficienty Syndroms
A.I.I.M.S. -All India Institute of Medical Science.
A.I.N.E.C. -All India Newspaper's Editors Conference.
A.M.I.E. -Associate member of the Institute of Engineers.
A.P.U -Asian Parlimantary Union.
A.R.C. -Administratative Reforms Commission.
A.S.E.A.N. -Association For South East Asian Nations.
AERB -Aromic Energy Regulatory Board.

Wednesday, June 21, 2006

அருஞ்சொற் பதங்கள்

Constitution -அரசியலமைப்பு.
Drafting Committee -அரசியலமைப்பு வரைவு குழு.
Constituent Assembly -அரசியலமைப்பு நிர்மாண சபை.
Preamble -அரசியலமைப்பின் முன்னுரை.
Citizenship -குடியுரிமை.
Citizenship By Desent -வாரிசு என்பதால் குடியுரிமை.
Citizenship BY Naturalisation -இயற்கையாக குடியுரிமை.
Losing Citizenship By Renunciation-வேண்டாமென்று துறத்தல் மூலம்
குடியுரிமையை இழத்தல்.
Losing Citizenship By Termination -இன்னொரு நாட்டின் பிரஜையானால்
அரசே குடியுரிமையை இல்லாமல்
ஆக்குதல்.
Losing Citizenship By Deprivation -அரசே குடியுரிமையை பறித்தல்
Fundamental Rights -அடிப்படை உரிமைகள்.

Monday, June 19, 2006

ஒட்டாதே

காதலியே
இனி அனுப்பும் கடிதங்களுக்கு
தபால் தலை
ஒட்டாதே
உன் இதயம் சுமந்து வரும்
கடிதங்களுக்கு
அவர்கள் ஓங்கிக் குத்துவதைத்
தாங்கமுடியவில்லை.

Thursday, May 25, 2006

மண்டல குழுக்கள்(ZONAL COUNCILS)

பொருளாதார திட்டமிடலுக்காக இந்தியா 5 மண்டலங்களாக பிரிக்கப்
பட்டுள்ளது. அவையாவன.
அ. வடக்கு மண்டலம்-ஹரியானா, பஞ்சாப்,ராஜஸ்தான்,ஜம்மு
காஶ்மீர் மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் போன்றவற்றை
உள்ளடக்கியது.
ஆ.தெற்கு மண்டலம்- ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, கேரளா
மற்றும் கர்நாடகா.
இ. மத்திய மண்டலம்- உத்திர பிரதேசம்,மற்றும் மத்திய
பிரதேசம்.
ஈ. கிழக்கு மண்டலம்- பீகார், மேற்கு வங்காளம், அசாம்
மணிப்பூர்,திரிபுரா,மேகலாயா,நாகலாந்து மிசோரம்,
அருணாச்சல பிரதேசம்.
உ. மேற்கு மண்டலம்- மாராஶ்டிரம்,குஜராத் மற்றும் கோவா.

Wednesday, May 24, 2006

கூட்டாட்சி(FEDERAL SYSTEM)

இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சி தத்துவத்திலானது. கூட்டாட்சி அமைப்பு அதிகாரத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளிடையே பகிர்ந்தளிக்கிறது. ஒவ்வொரு மாநிலமும் தன்னிச்யையானது. மத்திய மாநில அரசுகளுக்கான பிரச்சினைகளுக்கு தீர்வு காண தன்னிச்சை பெற்ற நீதிமன்றம் உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசாங்களின் சட்டபூர்வமான அதிகாரங்கள் அரசியலமைப்பின் எழாவது அட்டவணையில் மூன்று பட்டியல்களில் கொடிக்கப்பட்டுள்ளது. அவை மத்திய பட்டியல்(CENTRAL LIST) மாநில பட்டியல்(STATE LIST) மற்றும் இணை பட்டியல்(CONCURRENT LIST) ஆகும். மத்திய பட்டியல் 91 துறைகளையும், மாநில பட்டியல் 61 துறைகளையும், இணை பட்டியல் 51 துறைகளையும்(ஆதாரம்:INDIAN CONSTITUTION -M.V.PYLEE)கொண்டுள்ளது. பாராளுமன்றம் மத்திய பட்டியலிலுள்ள துறைகளையும் பாராளுமன்றமும் சட்டமன்றமும் இணைந்து இணை பட்டியலிலுள்ள துறைகளையும், மாநில சட்த மன்றம் மாநில பட்டியலிலுள்ள துறைகளையும் கட்டுபடுத்த சட்டம் வகுக்கிறது.
இந்திய அரசியலமைப்பின் ஶரத்து(SHARATTHU) 256 மாநில அரசுகள் பாராளுமன்றம் இயற்றிய சட்டங்களுக்கு உட்பட்டு அரசு அதிகாரங்களை செயல்படித்த வேண்டும். மேலும் மத்திய அரசு மாநிலங்களுக்கு அரசு கொள்கையின் வழிகாட்டு விதிகளை வெளியிடவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஶரத்து(SHARATTHU) 262 மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் மற்றும் பள்ளதாக்குகள் தொடர்பான சட்டங்களைக் கூறுகிறது.
இந்த ஶரத்தின்(SHARATTHU) கீழ் பாராளுமன்றன் இரு மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பங்கீடு போன்ற தாவாக்களை தீர்க்கலாம். மேலும் ஜனாதிபதி தேவைப் பட்டால் இரு மாநிலங்களுக்கு இடையிலான குழுவை அமைக்கலாம்.
அரசியல்லமைப்பின் படி ஒரு நிதிக் குழு(FINANCE COMMISION) உருவாக்கப்பட்டுள்ளது. அது சில இனங்களிலிருந்து கிடைக்கும் வருவாயை மாநிலங்களுக்கிடையே பகிர்ந்தளிக்க உதவுகிறது. வரவினங்கள் இரு விதத்தில் ஒதுக்கப்படுகின்றன. அவையாவன் அ.மத்திய மற்றும் மாநில அரசுகளிடையேயான ஒதுக்கீடு. ஆ.மானியம் மற்றும் மாநில உதவியாக மாநிலங்களுக்கான ஒதுக்கீடு.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரவினங்கள் பற்றி நீண்ட பட்டியல் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. நிதிக் குழு தலைவர் மற்றும் இதர உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அமைப்பு ஆகும்.

உயர் நீதிமன்றம்(HIGH COURT)

ஒரு மாநிலத்தின் மாநில அளவிலான உயர்ந்த நீதிமன்றம் உயர் நீதிமன்றமாகும். இது தலைமை நீதிபதியையும் இதர நீதிபதிகளையும் அங்கமாகக் கொண்டது. இந்த நீதிமன்றத்திற்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் நீதிபதிகள் கிடையாது. ஜனாதிபதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மாநீல ஆளுநரின் ஆலோசனையின் பேரில் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கிறார்.

மாநில சட்ட மன்றம்(STATE LEGISLATURE)

மாநில சட்த மன்றம் ஆளுனரையும், ஒன்றோ அல்லது இரண்டோ
அவைகளையும் (சட்ட சபை, மேலவை) கொண்ட அமைப்பு ஆகும். மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அரசியலமைப்பு படி சட்டமன்றத்தின் குறைந்த பட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை 60 அதிக பட்ச எண்ணிக்கை 500 ஆகும். மாநில மேலவையின் குறைந்த பட்ச எண்ணிக்கை 40 க்கு குறையாமலும் அதிக பட்சமாக மொத்த சட்ட மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்று ஒரு பங்குக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

Tuesday, May 23, 2006

மாநில ஆளுநர்(GOVERNOR)

மநிலத்தின் அதிகாரங்களனைத்தும் ஆளுநரிடமே உள்ளது. இவர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்.இவர் ஜனாதிபதியின் நம்பிக்கையை பெறும் வரை ௫ ஆண்டுகள் பதவியில் தொடர்கிறார். ௩௫ வயதைக் கடந்த எந்த ஒரு பிரஜையும் மாநில ஆளுநராக நியமிக்கப் படலாம். இவர் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினராக இருக்க முடியாது.

ராஜ்ய சபா(மேல்சபை)(RAJYA SABHA)

இந்த அவையின் அதிக பட்ச உறுப்பினர்கள் எண்ணிக்கை 250
ஆகும். 238 பேர் மாநிலங்கள் மற்றும் மாநிலப் பிரதேசங்களிலிருந்து
தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இலக்கியம், விஞ்ஞானம், கலை மற்றும்
சமூக அறிவியல் போன்றவற்றில் சிறந்த 12 பேர் ஜனாதிபதியால்
நியாமனம் செய்யப்படுகின்றனர். ராஜ்யசபா உறுப்பினர்கள் மாநில
சட்ட மன்ற உறுப்பினர்களால் மக்கள் தொகை அடிப்படையில்
விகிதாச்சார முறைப்படி ஒற்றை மாற்று வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். ராஜ்ய சபா ஒரு நிரந்தர அமைப்பு. மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவி விலகுகின்றனர். முப்பது வயதுக்கு குறையாத இந்திய பிரஜைகள் எவரும் ராஜ்ய சபா உறுப்பினராகலாம். தற்போதைய ராஜ்ய சபாவின் எண்ணிக்கை 244 இதில் 232 உறுப்பினர்கள் மாநில சட்ட சபைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்.

Monday, May 22, 2006

லோக்சபா(கீழ்சபை)(LOK SABHA)

இதன் உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். இவ் அவையின் அதிகபட்ச உறுப்பினர்கள் எண்ணிக்கை 552 ஆகும். இதில் 530 உறுப்பினர்கள் பல
மாநிலங்களிலிருந்தும் 20 உறுப்பினர்கள் மாநிலப் பிரதேசங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.மேலும் இருவர் ஆங்கிலோ இந்திய பிரஜைகளிலிருந்து ஜனாதிபதியால் நியமிக்கப் படுகிறார். இருபத்தைந்து வயதுக்கு குறையாத எந்த ஒரு சாதாரண இந்திய பிரஜையும் இந்த அவையின் உறுப்பினராகலாம். லோக்சபாவின் காலம் 5 ஆண்டுகள் ஆகும். தற்போதைய 13 வது லோக் சபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 545 (மாநிலங்களிலிருந்து 530, மாநிலப் பிரதேசங்களிலிருந்து 13, ஜனாதிபதியால் நியமிக்கப் பட்டவர்கள். 2)

உச்சநீதிமன்றம்(SUPREME COURT)

சிவில் மற்றும் கிரிமினல் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்கும் தகுதி கொண்ட இந்தியாவின் உயர்ந்த நீதிமன்றமே உச்ச
நீதிமன்றமாகும். இது தில்லியில் உள்ளது. இது தலைமை நீதிபதி மற்றும் 25 இதர நீதிபதிகளை அங்கமாக கொண்டது. ஒவ்வொரு நீதிபதியும் 65 வயது வரை பதவியில் தொடரலாம். நீதிபதிகள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்றனர்.

Sunday, May 21, 2006

பாராளுமன்றம்(PARLIAMENT)

இந்திய பாரளுமன்றம் இரட்டை அவை முறை (BICAMERALISAM) முறைப்படி(லோக்சபா மற்றும் ராஜ்ய சபா) உருவாக்கப்படுகுறது. பாராளுமன்றம் ஜனாதிபதியையும் இரண்டு அவைகளையும் உள்ளடக்கிய அமைப்பாகும்.

Saturday, May 20, 2006

ஜனாதிபதி

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இந்திய அரசின் முடிவுகளை- செயல் திட்டங்களை செயல் படுத்தும் அதிகாரம் பெற்ற ஒருவரே ஜனாதிபதி ஆவார். இவரே நாட்டின் பாதுகாப்பு படைகளின் (முப்படைகளின்) தலைவர் ஆவர். பாராளுமன்றத்தின் லோக்சபாவிற்கு போட்டியிட தகுதி வாய்ந்த 35 வயது நிரம்பிய எந்த ஒரு இந்திய பிரஜையும் இந்திய ஜனாதிபதி ஆவதற்கு தகுதி வாய்ந்தவர் ஆவார். ஜனாதிபதி 5 ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்.ஜனாதிபதி தேர்தலில் கீழ்க் கண்டோர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்.

அ.பாரளுமன்றத்தின் ஒரு அவைச் சார்ந்த உறுப்பினர்கள்.
ஆ.மாநில சட்ட சபைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்.

ஜனாதிபதி கீழ்க் கண்டோரை நியமிக்கிறார்:-

அ.பிரதமரு மத்திய அரசின் இதர மந்திரிகளும்.
ஆ. மத்திய அரசின் வழக்கறிஞர்
இ.மத்திய அரசின் தலைமை கணக்காயர்.
ஈ.மாநில ஆளுனர்கள்.
உ.உச்ச நீதி மன்ற மற்றும் உயர் நீதி மன்ற நீதிபதிகள்.

இந்திய ஜனாதிபதி கீழ்க் கண்ட மூன்று விதமான காரணங்களல் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தலாம்.
அ.போர் காரணமான நெருக்கடி (ஶரத்து 352)
ஆ.மாநிலங்களின் அரசியல் நெருக்கடி (ஶரத்து 356)
இ.நிதி நெருக்கடி (ஶரத்து 360)

திரு.அப்துல் கலாம் இந்தியவின் தற்போதைய ஜனாதிபதி ஆவார்.

இந்திய பாரளுமன்றத்தின் இரு அவைகளைச் சார்ந்த உறுப்பினர்களாலும் உதவி ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப் படுகிறார். இவர் மக்கள் தொகை அடிப்படையில் விகிதாச்சார முறைப்படி ஒறறை வாக்கு மூலம் 5 ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார். ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிட தகுதி வாய்ந்த 35 வயதைச் கடந்த இந்திய பிரஜைகள் உதவி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதி வய்ந்தவர்களாகும். திரு ஶெகாவத் தற்போதைய உதவி ஜனாதிபதி ஆவார்.

பிரதமரும் மற்ற மந்திரிகளும் ஜனாதிபதிக்கு ஆலோசனைகள் கூறி இந்திய அரசு செயல்பட உதவுகின்றனர். பிரதமரை ஜனாதிபதியே நியமிக்குறார். இது அமைச்சர்களை பிரதமரின் ஆலோசனையின் பேரில் ஜமாதிபதி நியமிக்கிறார்.
பாராளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களும் அமைச்சர்களாக நியமிக்கப் படலாம். உறுப்பினர்களாக இல்லாதவர்கள் அமைச்சர்களாகவோ பிரதமராகவோ நியமிக்கப்பட்டால் 6 மாதங்களுக்குள் இரு அவைகளில் ஏதேனும் ஒன்றில் உறுப்பினராக வேண்டும். பிரதமருக்கு தமது மந்திரி சபையை மாற்றி அமைக்க உரிமை உண்டு.மூன்று விதமான் அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

அ. முழு அதிகாரம் கொண்ட காபினெட் அமைச்சர்கள்.
ஆ. இராஜாங்க அமைச்சர்கள்.
இ. துணை அமைச்சர்கள்.

Friday, May 19, 2006

இந்திய அரசியமைப்பு

இந்திய அரசியமைப்பு சட்டத்தை அறிமுகம் செய்து
அதன் தேவையையும், குறிக்கோள்களையும் கூறுகிறது.இந்திய

அரசியலமைப்பின் முன்னுரை பின்வருமாறு:

"We, the people of India,
having solemnly resolverd to constitute India into a
sovereing socialistic, secular Democratic Republic
and to secute to all its citizens:
Justice, social economicand politicals,
Liberty of thought, expression, belief, faith and woraship:
Equality of status and of opportunity;
And to promote among them all
Fratemity assuring the dignity of the individual
and the unity and integrity of the nation:
In our constituent assembly this twenty-sixth day of November 1949
Do our hereby adopt, enact, and give to ourselves this constitution.

இந்திய அரசியலமைப்பின் அடிப்படைத் தத்துவங்களாவன மக்களின்
, மக்களின் அரசுரிமை வயது வந்தோருக்கு வாக்குரிமை அரசு வம்ச
ஆட்சி முறை ஒழிப்பு, உச்ச நீதி மன்ற அமைப்பு, தீண்டாமை ஒழிப்பு
தனியுரிமை ஒழிப்பு, சமத்துவம்,மதசார்பின்மை பொதுவுடைமை
குடியுரிமை.

இந்தியா அபார வெற்றி

ஜமைக்கா ஒருநாள் போடி: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி.
இந்த முதல் ஒருநாள் போட்டியில் ராகுல் டிராவிட் (105)ரன்களும் முகமது கைபின் (66) ரன்கள் அபார ஆட்டத்தால் இந்தியா ௫ விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு புள்ளி பெற்று முன் நிலையில் உள்ளது.
மழை காரணம்மாக 45 ஓவர் கள் கொண்டு இந்த போட்டி நிர்ணக்கப்பட்டன.டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது.
கேப்டன் பொறுப்பு ஏற்றதிலிருந்து சிறப்பாக செயல்பட்டு அணி வீரர்களுக்கு முன்னுதாரணமாக விரர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கி வரும் ராகுல் டிராவிட் நேற்று அபாரமாக பேட் செய்தார். அவர் நேற்று 99 பந்துகளில் சதமடித்தார்.ஒரு நாள் போட்டிகளில் இது அவரது 12 வது சதமாகும்.

Tuesday, May 16, 2006

அடிப்படை உரிமைகள்


இந்திய அரசியலமைப்பின் மூன்றாம் பகுதி ஶாத்து 12 முதல் 35 வரை இந்திய பிரஜைக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளைக் கூறுகிறது அவையாவன

1.சமத்துவ உரிமை(ஶாத்து 14,15,16,17,18,மற்றும் 19)
2.சுதந்திர உரிமை(ஶாத்து 19 முதல் 22)
3.சுரண்டல்களிலிருந்து பாதுகாக்கப்பட உரிமை (ஶாத்து 23,24)
4.எந்த மதத்தையும் பின்பற்ற உரிமை(ஶாத்து 15 முதல் 28 வரை)
5.கல்வி மற்றும் கலாச்சார உரிமை (ஶாத்து 29, 30)
6.சொத்து உரிமை (ஶாத்து 31,31A,31B,31C,31D)
7.அரசியலமைப்பு மூலம் பரிகாரம் பெறும் உரிமை (ஶாத்து32.32அ)

Saturday, May 13, 2006

தென்னிந்தியக் கூட்டணியை

  • பாளையக்காரர்களின் புரட்சி எந்த ஆண்டு வெடித்தது?
    விடை: கி.பி.1799
  • கட்டபொம்மன் எதிர்த்துப்போரிட்ட ஆங்கில தளபதி?
    விடை: மேஜர் பானர்மேன்.
  • எங்கு கட்டபொம்மனை தூக்கிலிட்டனர்?
    விடை: கயத்தார்.
  • பாளையக்காரர்களின் புரட்சிக்கு மற்றொரு பெயர்?
    விடை: தென்னிந்தியப் புரட்சி.
  • கட்டபொம்மனுடைய சகோதரர் யார்?
    விடை: ஊமைத்துரை
  • கட்டபொம்மனுக்கு தூக்குதண்டனை விதித்து தீர்ப்பளித்த ஆங்கிலேய கலெக்டர்?
    விடை: கலெக்டர் ஜாக்சன்.
  • தென்னிந்திய புரட்சி யாரால் நிர்வகிக்கப்பட்டது?
    விடை: மருதுபாண்டியன்.
  • திண்டுக்கல் கூட்டிணைப்பின் தலைவர்?
    விடை: கோபால் நாயக்கர்.
  • தென்னிந்தியாவை ஜம்புதீவின் தீபகற்பம் என கூறியவர்?
    விடை: மருது பாண்டியன்.
  • ஆங்கிலேயருக்கு எதிராக முதல் தென்னிந்தியக் கூட்டணியை உருவாக்கியவர்?
    விடை: புலித்தேவர்.

Thursday, May 11, 2006

சூடான முத்தங்கள்

சூடான முத்தங்கள்
அன்று உன்னை எண்ணி
நான் வடித்த கவிதைக்கு
இன்று என்
கண்ணீர் கொடுப்பது!

காதல் பாடம்

உன் நினைவுகளை
அழிக்கின்றேன்...
றப்பரால் அல்ல
என் கண்ணீரால்!

Friday, May 05, 2006

இன்றய அரசியல்

அரசியல் என்பது சுயநலத்திற்க்காகவா?
அல்லது
பொது நலத்துக்காகவா?
அரசியல் என்பது சாக்கடையா?
அல்லது
சாக்கடையாக மாற்றப்பட்டதா?
தேர்தலில் வெற்றி அடைந்த கட்சிகள் இடும் சட்டம் மக்களுக்காகவா?
அல்லது
சுயநலத்துக்காகவா?
முந்தய அரசியல் மக்களுக்கு நன்மையாக இருந்தா?
அல்லது
இன்றய அரசியல் மக்களுக்கு நன்மை செய்கின்றதா?
அரசியல் பணம், பதவி ஆசை கொண்டதா?
அல்லது
மக்கள் ஆசை கொண்டதா?
இன்றய அரசியல் மக்கள் நலம் கொண்டதா?
அல்லது
சுயநலம் கொண்டதா?
இன்றயா அரசியல் பழி உணர்ச்சிக் கொண்டதா?
அல்லது பாச உணர்ச்சிக் கொண்டதா?
இன்றய அரசியலில் தேர்தல்லுக்கு என்று செலவிடும் பணம் கட்சி பணம்மா?
அல்லது
மக்கள் பணமா?
இன்றய அரசியல் இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்குகின்றதா?
அல்லது
முட்டுக்கட்டையா இருக்குகின்றதா?
மக்கள் ஆட்சி என்பது முழுமையான மக்கள் நலன்னா?
அல்லது
மக்களின் உரிமையை பறிக்கும் கொள்ளை கூட்டத்தின் அமைப்பா?

சிந்திக்க வேண்டும் நமது சிந்தனைகளை முடக்க பலவிதமான கட்சிகள் எடுத்திருக்கும் ஆயுதம் என்ன என்றால்? சலுகைகள் எப்படி எனறால் எங்கள் கட்சி தேர்தலில் வெற்றி அடைந்தால் நாங்கள் மக்களுக்கு நிறையா இலவசமான நன்மைகளை செய்து தருகிறோம் என்று வாக்கு அளித்து சிந்திக்க வேண்டிய தருணங்களில் மக்களை திசைதிருப்புவது அரசியல் சூழ்ச்சி என்றுதான் கூற வேண்டும்.

Wednesday, May 03, 2006

அரசியல் சதி

நாட்டை ஆட்சி செய்கின்ற பெயரில் நாட்டையே சுடுகாடாக மாற்றும் காட்டு ஓநாய்கள் கூட்டம் இன்றும் அரசியல் என்ற பெயரில் மக்களை சகதியில் தள்ளும் அரசியல் சதிக்காரர்களாக நடமாடுகின்றனர். என்றுதான் தணியும் இந்த அரசியல் தாகம்.இந்த கொள்ளை கூட்டத்தின் பிடியில் சிக்கித் தவிக்கின்றது இன்றைய தமிழகம்.இந்த கயவர்கள் பெரும்பாலும் மக்களை கவருவதற்கு சலுகைகள் என்ற ஆயுதம் எடுத்து மக்களை பலியிட துணிகின்றனர் இந்ததுணிச்சலை யார்? அவர்களுக்கு அளித்தது. யாரும் இல்லை மக்களாகிய நாம்தான் தேர்தல் சமயம் மக்கள்ளாகி நாம் இருக்கின்ற கட்சிகளை எவ்வாறு மதிப்பிட்டு வாக்களித்தேம். வாக்களித்த கட்சி ஆட்சிக்கு வந்தால் என்நாட்டிற்க்கு என்ன நன்மை தரும் என் வீட்டிற்கு என்ன நன்மை தரும் என்று சிந்திக்காமல் வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டு அளித்து அப்படிப்பட்ட கயவர்களை இத்தனை காலம் சுகந்திரமாக இந்நாட்டில் உலாவ விட்டது போதும். இனியும் மக்களாகி நாம் சிந்தித்து வாக்களிக்காவிட்டால் பணம் ஆசை கொண்ட இந்த பூதங்களிடம் இருந்து வருங்கால இந்தியாவை காக்க யார் முன்வருவார்கள்.சிந்தனை என்பது இறைவன் தந்த வரம். ஆனால் தேர்தல் நோரங்களில் மக்களை சிந்திக்க விடாமல் பல சலுகைகளை வழங்குகிறேம் என்று மக்கள் சிந்தனைகளை சிதறடிகச்செய்யும் கயவர்களை துரத்தியடித்து நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடும் நல் உள்ளம் படைத்த தலைவர்களை தேர்ந்து எடுத்து அவர்களை வெற்றி மேடையில் அமர்த்துவது மக்கள்ளாகி நமது கடமை.

Tuesday, May 02, 2006

பாஞ்சாலங்குறிச்சி

  • சிறையில் 63 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த இந்தியப் புரட்சித் தலைவர்?
    விடை: ஜட்டின் தாஸ்.
  • வேதங்களை நோக்கி திரும்பி செல்லுங்கள் என கூறியவர்?
    விடை: தயானந்த சரஸ்வதி.
  • கி.பி.19-ம் நூற்றாண்டில் இளம் வங்காள இயக்கத்துக்கு ஊக்கமளித்தவர்?
    விடை: ஹென்றி விலியன் டிரோசியோ.
  • இந்திய மறுமலர்ச்சியின் விடிவெள்ளி என அழைக்கப்படுபவர்?
    விடை: ராஜாராம் மோகன் ராய்.
  • யாருடைய ஆட்சியில் சென்னை, கல்கத்தா மற்றும் மும்பாய் பல்கலைகழகங்கள் நிறுவப்பட்டது?
    விடை: டல்ஹௌசி பிரபு.
  • பிரிட்டிஶ் காலனி ஆதிக்கத்தின் விளைவு?
    விடை: நவீன இயந்திரங்களும் தொழிற்சாலைகளும் அறிமுகம்.
  • குதிராம் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆங்கில அதிகாரி யார்?
    விடை: ரான்ட்.
  • எந்த காங்கிரஸ் மாநாட்டில் கதர் இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது?
    விடை: பனாரஸ் மாநாடு.
  • ஆங்கில ஏகாதிபத்தியத்தை முதலில் எதிர்த்த தமிழ்நாட்டைச் சார்ந்தவர்?
    விடை: கட்டபொம்மன்.
  • கட்டபொம்மன் ஆட்சி செய்த பகுதி?
    விடை: பாஞ்சாலங்குறிச்சி.

Wednesday, April 26, 2006

சென்னையில் தன்னாட்சி இயக்கத்தை தொடங்கியவர்

  • அலிகார் முஸ்லிம் பல்கலைகழகத்தை நிறுவியவர்?
    விடை: சர்.செய்யது அஹமது கான்.
  • பனாரஸ் இந்துப் பல்கலைகழகத்தை நிறுவியவர்?
    விடை: மதன் மோகன் மாளவியா.
  • சென்னையில் தன்னாட்சி இயக்கத்தை தொடங்கியவர்?
    விடை: அன்னிபெசன்ட்.
  • ஆங்கில ஆட்சியில் எந்த கடைசி இந்தியன் மீது பொய் வழக்கு போட்டு நீதிமன்றம் குற்றவாளியென தீர்ப்பளித்தது?
    விடை: மகராஜ நந்தகுமார்.
  • பிரம்ம சமாஜத்தை நிறுவியவர்?
    விடை: ராஜாராம் மோகம்ராய்.
  • ராஜாராம் மோகம்ராயின் வாரிசு?
    விடை: தேவேந்திரநாத் தாகூர்.
  • இந்தியாவில் சட்டத்தின் மூலம் "சதி" என்ற உடன்கட்டை ஏறுதலை ஒழித்தவர்?
    விடை: வில்லியம் பென்டிங் பிரபு.
  • பிரார்த்தனா சமாஜத்தை நிறுவ காரணமாயிருந்தவர்?
    விடை: ஆத்ம ராம் பாண்டுரங்கன்.
  • 476. தமிழ் பகத்சிங் என் அழைக்கப்பட்டவர்?
    விடை: வாஞ்சிநாதன்.
  • இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முதன் முறையாக சிறைக்கு சென்ற ஆங்கிலேயர்?
    விடை: அன்னிபெசன்ட்.

Friday, April 21, 2006

ஆசை மொழி

பட்சிகளைப் பிடிப்பதற்கு ஆசைமொழி பேசி அவைகளை அருகே அழைக்க முயலுவது போல என்னிடம் என் நாண்பர்கள் என்று சொல்லிக் கொண்டு என்னை முகஸ்துதி செய்கிறர்கள் ஆனல் உள்ளூர அவர்கள் என்மீது கொண்டுள்ள துவேஶம் எனக்கு நன்றகப் புலப்படுகிறது. இத்தகையவர்கள் என்னை நேர்முகமாகவே ஏசி என்னைத் தூஶித்தாலும் நானும் அவர்களை எவ்வளவோ பாராட்டுவேன்- அவர்களுக்காக இரக்கமும் பட்டிருப்பேன்.

கசப்பும்-காதலும், அவைகளை ஆமோதிப்பவர்களின் மனதில் சந்தேகத்தையூட்டும்.

Thursday, April 13, 2006

அன்பு அன்பு

அன்பு அன்பு
என்று நாம்
எடுத்து வந்த அடிதான்
பிழைச்சாச்சு
சொந்தமென்றும் பந்தமென்றும்
சேர்ந்திருந்தோம்
நாட்டினிலே
ராணுவம் தந்த தொல்லையினால்
நாடுவிட்டு நாடு வந்தோம்
நாமமமைதி தானிழந்தோம்!
-அனுசுயா

Wednesday, April 12, 2006

காங்கிரஸ் கட்சியில் கராத்தே தியாகராஜன்

சென்னையில் தி.மு.க தலைவர் மு.கருணாநிதியை, தமிழ்க காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருஶ்ணசாமி நேற்று சந்தித்து பேசினார்.
சட்டசபை தேர்தலில் தி.மு.கவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் கராத்தே
தியாகராஜன் இன்று சேருவதாக தகவல் வெளியானது.

Monday, April 10, 2006

பொது அறிவு 1

  • இந்தியாவில் அஞ்சல் முறையை அறிமுகப்படுத்தியவர்?
    விடை: ராபர்ட் கிளைவ்.
  • விதவைகள் மறுமணத்திற்கு ஆதரவளித்த இந்தியர்?
    விடை: ராஜாராம் மோகன்ராய்.
  • சிட்டகாங் ஆயுதகிடங்கு சோதனையுடன் தொடர்புடையவர்?
    விடை: சூர்ய சென்
  • பிரம்ம ஞானசபையை நிறுவியவர்?
    விடை: மேடம் பிளவட்ஸ்கி மற்றும் கர்னல் ஆல்காட்.
  • கி.பி.1838-ல் தொடங்கப்பட்ட முதல் அரசியல் கழகம்?
    விடை: குடியேறியவர் கழகம்.
  • நவீன இந்தியாவில் முதலில் நிறுவப்பட்ட பொது சங்கம்?
    விடை: நில உடைமையாளர் சங்கம்.
  • இந்தியாவில் முதல் பல்கலைக்கழகம் எங்கு நிறுவப்பட்டது?
    விடை: கல்லத்தா
  • இந்தியப் பணியாளர் சங்கத்தை நிறுவியவர்?
    விடை: கோகலே.
  • தாய்நாட்டுப் பத்திரிகைச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
    விடை: கி.பி.1878.
  • இந்தியச் சங்கத்தை நிறுவியவர்?
    விடை: சுரேந்திரநாத் பானர்ஜி.

Sunday, April 09, 2006

முகமதிய ஆங்கில கீழ்த்திசை கல்லூரி

  • "இயேசு கிறிஸ்துவின் போதனைகள்" நூலை எழுதியவர்?
    விடை: ராஜாராம் மோகன் ராய்.
  • முகமதிய ஆங்கில கீழ்த்திசை கல்லூரியை நிறுவியவர்?
    விடை: சர் சையது அகமதுகான்.
  • தக்காண கல்விக் கழகத்தை ஏற்படுத்தியவர்?
    விடை: எம்.ஜி.ரானடே
  • பிரம்ம ஞான சபையின் எண்ணங்களை அன்னிபெசன்ட் அம்மையார் எந்த பத்திரிகை மூலம் பரவ செய்தார்?
    விடை: நியூ இந்தியா
  • இந்தியாவில் முதல் இருப்புபாதை எந்த இரு நகரங்களுக்கிடையே அமைக்கப்பட்டது?
    விடை: தானே முதல் மும்பாய் வரை
  • இந்தியாவில் ஆங்கில ஆட்சியின் போது தொழிற்சாலைகளின் வளர்ச்சியின்மைக்கு காரணம் ?
    விடை: செல்வந்தர்களின் முதலீட்டுக்கு உள்நாட்டில் முன்னுரிமையின்மை
  • ஆப்கானிஸ்தான் மீது முன்னோக்கிய கொள்கையை கடைபிடித்த ஆங்கில கவர்னர் ஜெனரல் .
    விடை: லிட்டன் பிரபு.
  • பிரிட்டிஶ் இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகளை அறிமுகப்படுத்தியவர்?
    விடை: ரிப்பன் பிரபு.
  • டில்லி நகரம் எப்போது நிறுவப்பட்டது?
    விடை: கி.பி. 736.
  • இந்தியாவில் முதல் நூல் எந்த மொழியில் அச்சிடப்பட்டது?
    விடை: ரோமன்.

முக்கிய தினங்கள்.

  • ஜனவரி 12 தேசிய இளைஞர் தினம்
  • ஜனவரி 15 இராணுவ தினம்
  • ஜனவரி 26 குடியரசு தினம், சர்வதேச கஸ்டம்ஸ் தினம்
  • ஜனவரி 28 தேசிய அறிவியல் தினம்
  • மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினம்
  • மார்ச் 15 உலக ஊனமுற்றோர் தினம்
  • மார்ச் 21 உலக வன தினம்
  • ஏப்ரல் 7 உலக ஆரோக்கிய தினம்
  • ஏப்ரல் 22 பூமி தினம்
  • மே 1 தொழிலாளர் தினம்
  • மே 3 பத்திரிகை சுகந்திர தினம்
  • மே(இரண்டாம் ஞாயிறு) தாய் தினம்
  • மே 8 உலக செஞ்சிலுவை தினம்
  • மே 15 சர்வதேச குடும்ப தினம்
  • மே 17 உலக தகவல் தொடர்பு தினம்
    மே 24 காமன் வெல்த் தினம்
  • மே 31 புகையிலை எதிர்ப்பு தினம்
  • ஜுன் 5 உலக சூற்றுச் சூழல் தினம்
  • ஜுன் 20 தந்தையர் தினம்
  • ஜுலை 11 உலக மக்கள் திகை தினம்
  • ஆகஸ்ட் 9 வெள்ளையனே வெளியேறு தினம், நாகசாகி தினம்
  • ஆகஸ்ட் 15 சுதந்திர தினம்
  • ஆகஸ்ட் 29 தேசிய விளையாட்டு தினம்
  • செப்டம்பர் 5 ஆசிரியர் தினம்
  • செப்டம்பர் 8 உலக எழுத்தறிவு தினம்
  • செப்டம்பர் 16 உலக ஒசோன் தினம்
  • செப்டம்பர் 26 காது கேளாதோர் தினம்
  • செப்டம்பர் 27 உலக சுற்றுலா தினம்
  • அக்டோபர் 1 உலக முதியோர் தினம்
  • அக்டோபர் 3 உலக குடியிருப்பு தினம்
  • அக்டோபர் 4 உலக விலங்கு நல தினம்
  • அக்டோபர் 8 இந்திய விமானப் படை தினம்
  • அக்டோபர் 9 உலக தபால் நிலைய தினம்
  • அக்டோபர் 10 தேசிய தபால் நிலைய தினம்
  • அக்டோபர் 14 உலக தர தினம்
  • அக்டோபர் 16 உலக உணவு தினம்
  • அக்டோபர் 24 ஐக்கிய நாடுகள் தினம்
  • நாவம்பர் 14 குழந்தைகள் தினம்
  • டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் தினம்
  • டிசம்பர் 4 கடற்படை தினம்
  • டிசம்பர் 10 மனித உரிமை தினம்
  • டிசம்பர் 23 விவசாயிகள் தினம்

Friday, April 07, 2006

பிரம்ம சமாஜம் [1828]

  • எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
    விடை: கி.பி. 1828
  • ஆரிய சமாஜத்தை நிறுவியவர்
    விடை: தயானந்த சரஸ்வதி
  • தயானந்த சரஸ்வதியின் இயற்பெயர் என்ன?
    விடை: மூலசங்கரர்.
  • இந்துமத்தின் மார்டின் லூதர் என வர்ணிக்கப்படுபவர்?
    விடை: தயானந்த சரஸ்வதி
  • தயானந்த ஆங்கில வேதகல்லூரியை லாகூரில் நிறுவியவர்?
    விடை: லாலா ஹன்ஸ் ராஜ்.
  • பிரம்ம ஞான சபையின் தலைமையிடம் இந்தியாவில் எங்கு அமைந்து உள்ளது?
    விடை: சென்னை.
  • பனாரஸ் நகரில் மத்திய இந்துக் கல்லூரியை நிறுவியவர்?
    விடை: அன்னிபெசன்ட்
  • முகமதிய இலக்கிய கழகத்தை நிறுவியவர்?
    விடை: நவாப் அப்துல் லத்தீப்.
  • அகமதிய இயக்கத்தை நிறுவியவர்?
    விடை: மிர்சா குலாம் அகமது.

இந்தியாவில் சிவில் சர்வீஸ் முறையை ஏற்படுத்தியவர்.

இந்தியாவில் சிவில் சர்வீஸ் முறையை ஏற்படுத்தியவர்.
விடை: ரிப்பன் பிரபு.
ஆங்கிலப் பாராளுமன்றம் எப்போது ஒழுங்குமுறை சட்டத்தை இயற்றியது
விடை:கி.பி.1773
இந்தியாவின் கடைசி முகலாயப் பேரரசர் இரண்டாம் பகதூர்ஶா எந்த நாட்டிற்கு ஆங்கிலேயர்களால் நாடுகடத்தப்பட்டார்?
விடை: பர்மா
கி.பி. 1854-ல் டல்ஹௌசி பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்ட முக்கியமான துறை
விடை: பொதுப்பணித்துறை
தபால் மற்றும் தந்தி இலாகா இந்தியாவில் யாருடைய ஆட்சி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?
விடை: டல்ஹௌசி பிரபு.

கி.பி. 1878 ல் தாய்நாட்டு பத்திகைச் சட்டத்தை ரத்து செய்தவர்?
விடை: ரிப்பன் பிரபு.
இந்தியச் சங்கத்தை எற்படுத்தியவர்?
விடை: சுரேந்திரநாத் பானர்ஜி
சம்பல்பூர் பகுதியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்திய தலைவர் யார்?
விடை: சுரேந்திர சாகி
கல்கத்தாவில் ஆசியச் சங்கத்தை நிறுவியவர்?
விடை: சர் வில்லியம் ஜாண்
இந்த்ய மறுமலர்ச்சியின் தந்தை என அழைக்கப்படுபவர்?
விடை: ராஜாராம் மோகன் ராய்


ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு எந்த நோக்கத்தில் வந்தனர்

ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு எந்த நோக்கத்தில் வந்தனர்?
விடை: வியாபாரம் செய்வதற்கு.
வாரிசுயில்லா கொள்கையை அறிமுகப்படுத்தியவர்.
விடை: டல்ஹளசி பிரபு.
ஜமீன்தார் முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர்.
விடை: கானிங் பிரபு.
யாருடைய ஆட்சிக்காலத்தில் வங்காளத்தில் நிலையான நிலவரித்திட்டம் அமுல்படுத்தப்பட்டது?
விடை: காரன் வாலிஸ் பிரபு.
முகலாயப் பேரரசின் கடைசி மன்னர் யார்?
விடை: இரண்டாம் பகதூர்ஶா.
வங்கப்பிரிவினையை அறிமுகப்படுத்தியவர்.
விடை: கர்சன் பிரபு.
தமிழ் நாட்டின் திலகர் என அழைக்கப்பட்டவர்.
விடை: வ.உ.சிதம்பரம்.
வங்கப் பிரிவினையின் முக்கிய நோக்கம்.
விடை: வங்காளத்தில் தேசீய ஒற்றுமையை பலவீனப்படுத்த.
ராணுவத்தில் சேருவதற்கான பொதுத்துறைச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
விடை: கி.பி.1856.
கி.பி.1856-ம் ஆண்டு ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு சட்டம் யாரால் இயற்றப்பட்டது?
விடை: கானிங் பிரபு.

Thursday, April 06, 2006

ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி

ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி எப்பொழுது நிறுவப்பட்டது.
விடை: கி.பி.1600.
478. தமிழ் நாட்டிலிருந்து காங்கிரஸ் கட்சியில் இருந்த தீவிரவாத பிரிவு உறுப்பினர்களுள் முக்கியமானவர்.
விடை: சுப்பிரமணிய சிவா.
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் கப்பற்படையின் பெயர் என்ன?
விடை: பாம்பே மரைன்.
இந்தியாவில் கிறிஸ்துவ மதத்தை முதலில் போதனை செய்தவர்.
விடை: புனித தாமஸ்.
எப்போது ஆங்கில சட்டம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது?
விடை: ஆகஸ்ட் 1,1672.
சென்னையை பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து ஆங்கிலேயர்கள் எந்த உடன்படிக்கை மூலம் திரும்ப பெற்றனர்?
விடை: எய்லா ச்ப்பேல், 1749.
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் பின்பற்றிய கொள்கை.
விடை: பிரித்தாளும் கொள்கை.
இந்தியாவில் பிரிட்டிஶ் பேரரசை நிறுவ வழுவகுத்தவர் யார்?
விடை: ராபர்ட் கிளைவு.
பர்மாவை இந்தியாவின் ஒரு பகுதியாக பிரிட்டிஷ் அரசு எந்த ஆண்டு இணைத்துக் கொண்டது?
விடை: கி.பி.188620.
எந்தப் போருக்குப் பிறகு கிழக்கிந்திய கம்பெனி மெதுவாக தங்கள் படைபலத்தை பயன்படுத்தி இந்தியப் பகுதிகளை கைப்பற்றியது.
விடை: பிளாசிப் போர்.

Wednesday, April 05, 2006

கொள்குறி வகை வினாக்கள்

1.இந்தியாவுக்கு புதிய கடல் வழியை கண்டுபிடித்தவர் யார்?
விடை: வாஸ்கோடகாமா.
2.ஐரோப்பியர்களால் முதலில் கைப்பற்றப்பட்ட இந்தியப் பகுதி?
விடை: கோவா.
3.இந்தியாவுக்கு முதலில் விஜயம் செய்த ஐரோப்பியர் யார்?
விடை: நிக்கோலா கான்டி.
4.கிழக்கிந்திய கம்பெனியை நிறுவ ஒப்புதல் அளித்த இங்கிலாந்து மன்னர் யார்?
விடை: முதலாம் எலிசபெத்.
5.கி.பி 1613-ம் ஆண்டு ஐகாங்கீர் மன்னரின் ஒப்புதல் பெற்று தொடங்கப்பட்ட அயல்நாட்டு வியாபாரக் கம்பெனி எது?
விடை: போர்த்துக்கீசிய வியாபார கம்பெனி.
6.எளிதில் யாரும் கைபற்ற முடியாத பாதுகாப்பு அரணைக் கொண்டுள்ள கோட்டை இந்தியாவில் எங்குள்ளது?
விடை: கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டை.
7.பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்த இந்தியப்பகுதி எது?
விடை: சந்திர நாகூர்.
8.இந்தியாவின் எந்த இந்தியப்பகுதி போர்துகீசியரின் ஆதிக்கத்தில் இதுந்தது.
விடை: டாமன்.
9.ஆங்கிலேயர்களின் முதல் தொழிற்சாலை இந்தியாவில் எங்கு
நிறுவப்பட்டது?

விடை: சூரத்.
10.ஆந்தித கேசரி என அழைக்கப்பட்டவர்.
விடை: பிரகாசம் ரெட்டி.

Tuesday, April 04, 2006

மின்னஞ்சல் கடிதங்களை வரிசைப்படுத்த

நமக்கு வரும் மின்னஞ்சல் கடிதங்களை நாம் படித்தவுடன் அழிப்பதில்லை.எதற்கும் இருக்கட்டும் என்று அப்படியே வைத்து விடுகிறோம்.தேவையற்ற கடிதங்களை அழித்தாலும் மெயில் பெட்டியில் நிறைய சேர்ந்து விடுகிறது.பின்னாளில் எந்த கடிதத்தையாவது தேடும்போது அதனைக் கண்டு பிடிப்பதில் குழப்பம் ஏற்படுகிறது. ஒருவரே அடிக்கடி நமக்கு கடிதம் எழுதுகையில் அவரிடமிருந்து வந்துள்ள பல கடிதங்களில் நாம் தேடும் குறிப்பிட்டகடிதம் எது என்பதைக் கண்டறியவும் நேரம் ஆகிறது. இதற்கு ஒரு வழி உள்ளது.
இவற்றை வரிசைப்படுத்தலாம். எம்.எஸ்.அவுட்லுக் அல்லது அவுட்லுக்
எக்ஸ்பிரஸ் மூலம் தங்கள் கடிதங்களை இறக்கிப் படிப்பவர்கள்
கீழ்க்கண்டவாறு செயல் படவும். இன்பாக்ஸினைக் கவனியுங்கள். அதன்
தலைப்பில் கட்டங்கள் மிதாக சில சில தலைப்புக்கள் இருக்கும். From, subject, Received, ect... என இவை இருக்கும். இதில் எந்ததலைப்பின் கீழ் நீங்கள் பிரித்து அடுக்க விரும்புகிறீர்களோ அதன் தலைப்பில் சென்று கிளிக் செய்திடுங்கள். கடிதங்கள் அனைத்தும் அதற்கேற்றவகையில்
அடுக்கப்பட்டுவிடும். அனுப்பியவர் வ்ரிசையில் பெற்ற நாள் வரிசையில் கடித அளவு வரிசையில் என பல வகைகளில் அடுக்கலாம். அதே போல இந்த வரிசை மாற்றிப் பெற வேண்டும்மெனில் மீண்டும் அப்போதைய
தேவைக்கேற்ப வரிசைப்படுத்தலாம். இதில் கர்சரை மேல் கட்டத்தில்
வைத்திடுகையில் அம்புக்குறி மேல் நோக்கி இருந்தால் கடிதங்கள் A to z or oldest date to newest என வரிசைப்படுத்தப்படும்.
மவுஸின் அம்புக்குறி கீள் நோக்கி இருந்தால் newest date to oldest
வரிசைப்படுத்தப்படும்.
படித்தவை

தெரியுமா?

1.நீண்ட சாலை-கிராண்ட் டிரங்க் சலை.
2. இந்தியாவில் மிக உயரமான நீர் வீழ்ச்சி-ஜோக் நீர்வீழ்ச்சி, மைசூர்.
3. இந்தியாவில் மிகப் பெரிய ஏரி-காஷ்மீரில் உள்ள ஊலர் ஏரி.
4."வெப்" என்ற கம்யூட்டர் நெட்வொர்க்கினை உருவாக்கியவர்- பெர்ன்ர்ஸ்ஸீ.
5.இந்தியாவில் ரயில்வே மியூசியம் அமைந்துள்ள இடம்-புது டில்லி.
6.இந்திய ராணுவத்தின் முதல் தலபதி ஜெனரல்-கே.எம்.கரியப்பா.
7.இந்தியாவில் ஐ எஸ் ஒ 9002 சான்றளிக்கப்பட்ட முதல் துறைமுகம்-தூத்துக்குடி

Monday, April 03, 2006

இருள்சேர்

இருள்சேர் இருவினையும் சேரா: இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

Thursday, March 30, 2006

மீண்டும் ஒரு திருக்குறள்

இதயத்தில் எழுதிய உறவுகள் வையகத்தில்
என்றும் இறப்பது இல்லை.

Wednesday, March 29, 2006

மின்னல்

உன்னை பார்த்தேன்,
பளீச் என்று வந்தாய்,
நான் பிரமித்தேன்
என் விளியால் உன்னை
உற்று நோக்கினேன்,
இருளாக்கி விட்டாய்
என் விளிகளை.

Tuesday, March 28, 2006

பேருந்து

நான் நடந்து சென்றேன்
ஆனால்,
என்னை சுமந்து சென்றாய்
என் மனதில் யோசித்தேன்,
சிரித்தேன்,
உன்னிடம் ஒன்றை எதிர்பார்த்தேன்,
ஆனால்,
என்னிடம் பணத்தை பெற்று விட்டாய்.

Monday, March 27, 2006

வந்தே மாதரம் என்போம் - எங்கள் வந்தே மாதரம்

வந்தே மாதரம்

ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மமித் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ரயினும் ஒன்றே - அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே
ஈனப் பறையர்க ளேனும் - அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?

சீனத்த ராய்விடு வாரோ? - பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ?
ஆயிரம் உண்டிங்கு ஜாதி- எனில்
அன்னியர் வந்து புகலென்ன நீதி? ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்
சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ?

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?
எப்பதம் வாய்த்திடு மேனும் நம்மில்
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்

முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்
புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு
போயின நாட்களுக் கினிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி
-பாரதியார்

அன்பு

அவள் விழிகளை பார்த்தேன்
ஒளி இழந்து காணப்பட்டது
காரணம் கேட்டேன்
ஒன்றும் இல்லை என்றாள்
என்னால் நம்பமுடியவில்லை
உண்மையை சொல் என்றேன்
உன் கண்களை பார் என்றாள்
பார்த்தேன் அவள் விழிகளில்
கண்ணீர் வடியும் கண்களை

நரேன்

Sunday, March 26, 2006

இயற்கை எழில் கொஞ்சும் "சிக்கிம்"

சுற்றுலா சென்று இயற்கை நமக்கு தந்துள்ள அழகை ரசிக்கும் நபரா நீங்கள்?
அப்படியானால் நீங்கள் கட்டாயம் போக வேண்டிய மாநிலம் சிக்கிம். பனி
மூடிய சிகரங்கள், ஆல்பின் மலர்கள், வண்ண வண்ண கூரைகளைக் கொண்ட
மத குருக்களின் மடாலயங்கள் என் மனதைக் கொள்ளை கொள்ளும் பல்
அழகான இடங்கள் உள்ளன.அது மட்டுமின்றி அந்த மக்களின் உழைப்பில்
உருவான பல பொருட்களும் கட்டடங்களும் சிறப்பானவையே. இவை
அனைத்தையும் சிறிது கூட சலிப்பு இல்லாமல் பார்த்து ரசிகாலாம். இவ்
இடம் பற்றிய முழுவிவரங்களையும் www.sikkiminfo.net இணைய தளத்தில்
பார்க்கலாம். இமய மலையின் இயற்கை அழகு, அங்குள்ள பள்ளதாக்குகள்,
தாவரங்கள், பறவை இனங்கள் ஆகியவையும் இந்த தளத்தில்
காட்டபடுகின்றன.

Thursday, March 23, 2006

கவிதை

காற்று

உன் வரவை எதிர்நோக்கினேன்,
வந்தாய்!
என்னை குளிர செய்வாய் என்றுநினைத்தேன்,
ஆனால்!
கோபத்தை எழுப்பி என்னையே,மாள செய்து விட்டாய்.

மழை

என்னை நோக்கி வந்தாய்;
என்னையே ஆவியாக கொண்டு சென்றாய்,
உன் மனதை குளிர செய்தாய்
என்னையே நடுங்க வைத்தாய்.

எழுதியவர்
ஜெ.ஜஸ்டின் கிறிஸ்டோபர்.
கே.எம்.சி.கச்
கன்னியாகுமரி
மருத்துவகல்லூரிஆசாரிபள்ளம்.

Wednesday, March 22, 2006

விதவை மறுமணம் பற்றிப் பாரதியின் கருத்தும்-விவாதமும்

ஆணும் பெண்ணும் சமாகத் தோன்றிய மனித இனத்தில் பெண் உயர்ந்த
நிலையைப் பெறுவதைப் புராதன சமுதாயத்தில் காணமுடிகிறது.
தனிச் சொத்துடைமை உருவான்போது அதன் தொடர் விளை வாகப் பெண்ணை
அடிமையாக்கும் நிலை ஏற்ப்பட்டது. பொருளாதாரக் காரணிகளுக்காக
உருவாக்கப்பட்டது பெண்ணடிமைத்தனம் அரசியலால் வளர்த்தெடுக்கப்பட்ட
பண்பாட்டால் பாதுகாக்கப்பட்டது. ஆண்மட்டுமே ஆளத்தகுதியுடையவன் என்ற
கருத்துவின் மூலம் முடிவெடுக்கும் அதிகாரங்கள் ஆணுக்குரியதாக
வரையறுக்கப்பட்டன. இந்தியாவில் பெண்ணடிமைத்தன்ம் ஆண் மேலாதிக்க
உணர்யுகளோடும், முதலாளித்துவ சமூக அமைஉபோடும் மத சாதிய
மரபுகளோடும்,பின்னிப் பிணைந்து வளர்க்கப்பட்டது.
"தையல் சொற்கேளேல்"
"பேதமை என்பது மாதர்க்கணிகலம்"
"பெண்ணாகி வாந்ததொரு மாயப் பிசாசு"
"பெண்கள் சிரிச்சாப் போச்சு""புகையிலை விச்சா போச்சு"
"அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு"
"கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஸ்ன்"
"சாண்பிள்ளையானாலும் ஆண்பிள்ளை"
போன்ற வார்த்தைகளே புழங்கிக் கொண்டிருந்த காலக் கட்டத்தில்-
"தையலை உயர்வு செய்"
"பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன்"
"பெண்களறிவை வளர்த்தால் வையம் பேதமை அற்றிடும்"
"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்கும்"
"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தார்"
"பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா"
என்று பாடிச் சமூகத்தில் பெண்ணென்பவளை மனுஶியாகப் பாவித்தவன் பாரதி.
தொடரும்.................

சமூகம்

"பாரடா உனது மானிடப் பரப்பைப்
பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்
'என்குலம்'என்றுனைத் தன்னிடம் ஒட்டிய
மக்கட் பெருங்கடல் பார்த்து ம்கிழ்ச்சிகொள்!
அறிவை விரிவுசெய்; அகண்ட மாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
அணைத்துக் கொள்! உன்னை சங்கம மாக்கு!
மானிட சமுத்திரம் நானென்று கூவு!"

"இமய சாரலில் ஒருவன் இருமினால்
குமரியி லிருந்து மருந்துகொண்டு ஓடினான்."

கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல், சமூகம் இப்படி இருந்தது என்று
கூறுகிறார். கம்பன்


நான் படித்தவை.

மருத்துவம்



மயக்க மருந்து

நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையின்போது எதுவுமே தெரியாமலிருக்க
குளோரோ பார்ம் என்ற மயக்க மருந்து கொடுக்கப்படுறது. இந்த மருந்தை
கண்டுபிடித்தவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டாக்டர் 'ஜேம்ஸ் சிம்சன்'
என்ப வரார்.

நன்றி

தங்கமலர்

தொகுப்பு:-
கே.எஸ்.செல்வபுவனேஸ்வரி,விஜயாச்சம்பாடு.

தினம் ஒரு திருக்குறள் வேண்டுதல்

1.கடவுள் வாழ்த்து

4.வேண்டுதல் வேண்டாமை இலான்டி சேர்ந்தார்கு
யாண்டும் இடும்பை இல.

Tuesday, March 21, 2006

பொது அறிவு

அரை அடி குரங்கு
உலகின் மிகச் சிறிய குரங்கு எது தெரியுமா? டார்சியார் என்று அழைக்க படும் குரங்கு இனம். இது பெரிய மரங்களில் தான் வாழும் என்று நினைத்து விடாதீர்கள். சிறிய, மெலிந்த கிளையுள்ள் மரங்களில் கூட இந்த குரங்கினால் வசிக்க முடியும் காரணம், இதன் அரை அடி உயரம்தான். டார்சியர் குரங்கு தற்போது பிலிப்பைன்ஸ் காடுகளில் மட்டுமே காணப்படுகின்றன.
தினத்தந்திக்கு நன்றி

குறிப்புகள்

கூடங்குளம் அணுமின் நிலையக் கட்டுமானப் பணிகள் 80 விழுக்காடு
முடிவடைந்துவிட்டன.தொழில் நுட்ப்ப பணிகள் தற்போது தொடங்கப்
பட்டுள்ளன். 2007-ம் ஆண்டில் ஆணுமின் நிலையம் செயல்படத் துவங்கும்.
முதல் கட்டமாக 2000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்' என
திட்ட தொழில் நுட்ப இய்க்குநர் குவாசா அலெக்ஸாண்டர் தெரிவித்து
உள்ளார்.


ஆராய்ச்சி மேற் கொள்வதற்காக வெள்ளி கிரகத்திற்கு ஐரோப்பா விண்கலம்
அனுப்பியுள்ளது. ரஶ்யாவில் உள்ள பைக்கனூர் விண்வெளி மையத்திலிருந்து 09.11.2005 அன்று அனுப்பப்பட்டது. 'வீனஸ் எக்ஸ்பிரஸ்' என்றழைக்கப்படும்
இந்த விண்கலம் வெள்ளி கிரகத்தைச் சென்றடைய 153 நாட்கள் ஆகும்.
வெள்ளி கிரகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் முதல் விண்கலம் இது என்பது குறிப்பிடதக்கது.


வண்டலூர் உயிரியல் பூங்காவில் அனைத்து விலங்குகள் குறித்த
விவரங்களை இன்டர்நெட் மூலம் பார்க்க சிறப்பு வசதிகள் ய்யப்பட்டுள்ளன். இதற்காக உயிரியல் பூங்காவின் இணையதளம், டி.சி.எஸ். நிறுவனத்தின் உதவியுடன் முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.


நாட்டின் தொழில் நிறுவனங்களின் வளர்சிக்கு இடையூறாக இருக்கும் தடைக் கற்களை அகற்ற அரசு உறுதி பூண்டுள்ளது. அதே நேரத்தில் நாட்டிலுள்ள
ஏழை மக்களின் வாழ்க்கையையும் முன்னேற்றியாக வேண்டும். அப்போதுதான் தடையற்ற வளர்ச்சி பாதையில் செல்லமுடியும் என்று பிரமர் டாக்டர்.மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

Wednesday, March 15, 2006

திருக்குறள்

1.கடவுள் வாழ்த்து
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

கற்றதனால் ஆய பயன் என்கொல்,வாலறிவன்
நற்றாள் தொழொஅர் எனின்.

மலர்மிசை ஏகிளாள் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

வேண்டுதல் வேண்டாமை இலான்டி சேர்ந்தார்கு
யாண்டும் இடும்பை இல.

இருள்சேர் இருவினையும் சேரா: இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஓழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

தனக்குஒவமை இல்லாதவான் தான்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

அறஆழி அந்தணன் தான்சேர்ந்தாஇக்கு அல்லால்
பிறஆழி நீந்தல் அரிது.

கோள் இல்பொறியில் குணம் இலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர்,நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

2.வான் சிறப்பு

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுஉணரற் பாற்று.

துப்பார்க்குத் துப்புஆய துப்புஆக்கித் துப்பார்க்குத்
துப்பாஆய தூஉம் மழை.

வீண்இன்று பொய்ப்பீன் விரிநீர் வியனுலகத்து
உன்நின்று உடற்றும் பசி.

ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளம்குன்றிக் கால்.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றுஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றுஆங்கே
பசும்புல் தலைகாண்பது அரிது.

நெடும்கடலும் தன்நீர்மை குன்றும் தடித்துஎழிலி
தான்நல்காது ஆகி வீடின்.

சிறப்போடு பூசனை செல்லது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்காது எனின்.

நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.

3.நீத்தார் பெருமை

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுபத்து
வேண்டும் பனுவல் துணிவு.

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிகொண் டற்று.

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

உரனென்னும் தோட்டியான் ஒர்ஐந்தும் காப்பான்
வரன்என்னும் வைப்பிற்குஒர் வித்து.

ஐந்துஅறிவித்தாள் ஆற்றல் அகல்விசும்பு உளார்கோமான்
இந்திரனே சாலும் கரி.

செயற்குஅரிய செய்வார் பெரியார்:சிரியர்
செயற்குஅரிய செய்கலா தார்.

சுவைஒளி ஊறுஒசை நாற்றமென்னு ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

குணம்என்னும் குன்ஏறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டு ஒழுக லாள்.

4.அறன் வலியுறுத்தல்

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.

அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்குஇல்லை கேடு.

ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல்.

மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற.

அழுக்காறு அவாவெகுளி இன்னாசொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

அன்று அறிவாம் என்னாது அறம்செய்க:மற்றுஅது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

அறத்துஆறு இதுஎன வேண்டா:சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் ஆஃதுஒருவன்
வாழ்நாள் வழிஅடைக்கும் கல்.

அறத்தான் வருவதேஇன்பம் மற்று எல்லாம்
புறத்த புகழும் இல.

செயல்பாலது ஓரும் அறனே:ஒருவற்கு
உயற்பாலது ஒரும் பழி.

5.இல்வாழ்க்கை

இல்வாழ்வான் என்பான் இயல்புஉடைய மூவர்க்கும்
நல்ஆற்றின் நின்ற துணை.

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.

தென்புலத்தார், தெய்வம், விருந்துஒக்கல் தான்என்றுஆங்கு
ஐம்புலத்துஆறு ஒம்பல் தலை.

பழிஅஞ்சிப் பாத்துஊண் உடைத்துஆயின் வாழ்க்கை
வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

அன்பும் அறனும் உடைத்துஆயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

அறத்துஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்துஆற்றில்
போஒய்ப் பெறுவது எவன்.

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.

ஆற்றின் ஒழுக்கி, அறன்இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.

அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை ஆஃதும்
பிறன்பழுபது இல்லாயின் நன்று.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உரையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

6.வாழ்க்கைத் துணை நலம்.

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்கைத் துணை.

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின்,வாழ்க்கை
எனைமாட்சித்து ஆயினும் இல்.

இல்லதென் இல்லவள் மாணபானால்,உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.

பெண்ணின் பெருத்தக்க யாஉள,கற்புஎன்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதுஎழுவாள்
பெய்யெனப் பெய்யுன் மழை.

தற்காத்துத் தற்க்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்வுஇலான் பெண்.

சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழுன் உலகு.

புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.

மங்கலம் என்ப மனைமாட்சி;மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கள் பேறு.

7.மக்கட்பேறு

பெறுமவற்றுள் யாம்அறிவது இல்லை அறிவுஅறிந்த
மக்கள்பேறு அல்ல பிற.

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கள் பெறின்.

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையாள் வரும்.

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூள்.

மக்கள்மெய் தீண்டல் உடற்குஇன்பம்; மற்றுஅவர்
சொல்கேட்டல் இன்பம் செவிக்கு.

குழல்இனிது யாள்இனிது என்பதம் மக்கள்
மழலைசொல் கேளா தவர்.

தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

தம்மிள் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்உயிர்க்கு எல்லாம் இனிது.

ஈன்ற பொழுதின் பெரிதுஉவக்க்கும் தன்மகளைச்
சான்றோன் எனகேட்ட தாய்.

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொலெனும் சொல்.

8.அன்புடைமை

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

அன்புஇலார் எல்லாம் தமக்குரியர் அன்புஉடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

அன்போடு இயைந்த வழக்குஎன்ப;ஆர் உயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.

அன்புஈனும் ஆர்வம் உடைமை;அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.

அன்புஉற்று அமர்ந்த வழக்க்குஎன்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்;
மறத்திற்கும் அஃதே துணை.

என்பு இலதனை வெயில்போலக் காயுமே
அன்பு இலதனை அறம்.

அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்காண்
வற்றல் மரம்தளிர்த்து அற்று.

புறத்துஉறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துஉறுப்பு அன்பு இலவர்க்கு.

அன்பின் வழியது உயிர்நிலை;அஃதுஇலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

Tuesday, March 14, 2006

9.விருந்தோம்பல்


இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விந்துஓம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.

விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா
மருந்துஎனினும் வேண்டற்பாற்று அன்று.

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.

அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.

வித்தும் இடல்வேண்டும்,கொல்லோ விருந்துஓம்பி
மிச்சில் மிசைவான் புலம்.

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்துஇருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.

இனைத்துணைத்து என்பதுஒன்று இல்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.

பரிந்துஓம்பிப் பற்றுஅற்றேம் என்பர் விருந்துஓம்பி
வேள்வி தலைப்படா தார்.

உடைமையுள் இன்மை விருந்துஓம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.

மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

Thursday, March 02, 2006


Fine Friends open my eyes, Smart Friends open my mind but only sweet Friends Heart, Have a NICE day to ALL




AGE OF SONGS
1 to 8 : Anajali Anjali ...............
9 to 13 Enakoru Girl Friend ...........
14 to 25 Nam vayathuku vantho ........
26 to 40 Asai 100 vagai ...............
40 to 60 Enge Nimmathe ..........
Above 60 No songs Music only

JOKES ..............

Husband : Coffe Roba Stronga iruke enna pottae?
Wife : Oru spoon cement poten.

Wednesday, March 01, 2006


WECOME TO MY WEBSITE

BY
RAJAKUMAR.T