Thursday, March 30, 2006

மீண்டும் ஒரு திருக்குறள்

இதயத்தில் எழுதிய உறவுகள் வையகத்தில்
என்றும் இறப்பது இல்லை.

Wednesday, March 29, 2006

மின்னல்

உன்னை பார்த்தேன்,
பளீச் என்று வந்தாய்,
நான் பிரமித்தேன்
என் விளியால் உன்னை
உற்று நோக்கினேன்,
இருளாக்கி விட்டாய்
என் விளிகளை.

Tuesday, March 28, 2006

பேருந்து

நான் நடந்து சென்றேன்
ஆனால்,
என்னை சுமந்து சென்றாய்
என் மனதில் யோசித்தேன்,
சிரித்தேன்,
உன்னிடம் ஒன்றை எதிர்பார்த்தேன்,
ஆனால்,
என்னிடம் பணத்தை பெற்று விட்டாய்.

Monday, March 27, 2006

வந்தே மாதரம் என்போம் - எங்கள் வந்தே மாதரம்

வந்தே மாதரம்

ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மமித் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ரயினும் ஒன்றே - அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே
ஈனப் பறையர்க ளேனும் - அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?

சீனத்த ராய்விடு வாரோ? - பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ?
ஆயிரம் உண்டிங்கு ஜாதி- எனில்
அன்னியர் வந்து புகலென்ன நீதி? ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்
சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ?

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?
எப்பதம் வாய்த்திடு மேனும் நம்மில்
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்

முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்
புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு
போயின நாட்களுக் கினிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி
-பாரதியார்

அன்பு

அவள் விழிகளை பார்த்தேன்
ஒளி இழந்து காணப்பட்டது
காரணம் கேட்டேன்
ஒன்றும் இல்லை என்றாள்
என்னால் நம்பமுடியவில்லை
உண்மையை சொல் என்றேன்
உன் கண்களை பார் என்றாள்
பார்த்தேன் அவள் விழிகளில்
கண்ணீர் வடியும் கண்களை

நரேன்

Sunday, March 26, 2006

இயற்கை எழில் கொஞ்சும் "சிக்கிம்"

சுற்றுலா சென்று இயற்கை நமக்கு தந்துள்ள அழகை ரசிக்கும் நபரா நீங்கள்?
அப்படியானால் நீங்கள் கட்டாயம் போக வேண்டிய மாநிலம் சிக்கிம். பனி
மூடிய சிகரங்கள், ஆல்பின் மலர்கள், வண்ண வண்ண கூரைகளைக் கொண்ட
மத குருக்களின் மடாலயங்கள் என் மனதைக் கொள்ளை கொள்ளும் பல்
அழகான இடங்கள் உள்ளன.அது மட்டுமின்றி அந்த மக்களின் உழைப்பில்
உருவான பல பொருட்களும் கட்டடங்களும் சிறப்பானவையே. இவை
அனைத்தையும் சிறிது கூட சலிப்பு இல்லாமல் பார்த்து ரசிகாலாம். இவ்
இடம் பற்றிய முழுவிவரங்களையும் www.sikkiminfo.net இணைய தளத்தில்
பார்க்கலாம். இமய மலையின் இயற்கை அழகு, அங்குள்ள பள்ளதாக்குகள்,
தாவரங்கள், பறவை இனங்கள் ஆகியவையும் இந்த தளத்தில்
காட்டபடுகின்றன.

Thursday, March 23, 2006

கவிதை

காற்று

உன் வரவை எதிர்நோக்கினேன்,
வந்தாய்!
என்னை குளிர செய்வாய் என்றுநினைத்தேன்,
ஆனால்!
கோபத்தை எழுப்பி என்னையே,மாள செய்து விட்டாய்.

மழை

என்னை நோக்கி வந்தாய்;
என்னையே ஆவியாக கொண்டு சென்றாய்,
உன் மனதை குளிர செய்தாய்
என்னையே நடுங்க வைத்தாய்.

எழுதியவர்
ஜெ.ஜஸ்டின் கிறிஸ்டோபர்.
கே.எம்.சி.கச்
கன்னியாகுமரி
மருத்துவகல்லூரிஆசாரிபள்ளம்.

Wednesday, March 22, 2006

விதவை மறுமணம் பற்றிப் பாரதியின் கருத்தும்-விவாதமும்

ஆணும் பெண்ணும் சமாகத் தோன்றிய மனித இனத்தில் பெண் உயர்ந்த
நிலையைப் பெறுவதைப் புராதன சமுதாயத்தில் காணமுடிகிறது.
தனிச் சொத்துடைமை உருவான்போது அதன் தொடர் விளை வாகப் பெண்ணை
அடிமையாக்கும் நிலை ஏற்ப்பட்டது. பொருளாதாரக் காரணிகளுக்காக
உருவாக்கப்பட்டது பெண்ணடிமைத்தனம் அரசியலால் வளர்த்தெடுக்கப்பட்ட
பண்பாட்டால் பாதுகாக்கப்பட்டது. ஆண்மட்டுமே ஆளத்தகுதியுடையவன் என்ற
கருத்துவின் மூலம் முடிவெடுக்கும் அதிகாரங்கள் ஆணுக்குரியதாக
வரையறுக்கப்பட்டன. இந்தியாவில் பெண்ணடிமைத்தன்ம் ஆண் மேலாதிக்க
உணர்யுகளோடும், முதலாளித்துவ சமூக அமைஉபோடும் மத சாதிய
மரபுகளோடும்,பின்னிப் பிணைந்து வளர்க்கப்பட்டது.
"தையல் சொற்கேளேல்"
"பேதமை என்பது மாதர்க்கணிகலம்"
"பெண்ணாகி வாந்ததொரு மாயப் பிசாசு"
"பெண்கள் சிரிச்சாப் போச்சு""புகையிலை விச்சா போச்சு"
"அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு"
"கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஸ்ன்"
"சாண்பிள்ளையானாலும் ஆண்பிள்ளை"
போன்ற வார்த்தைகளே புழங்கிக் கொண்டிருந்த காலக் கட்டத்தில்-
"தையலை உயர்வு செய்"
"பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன்"
"பெண்களறிவை வளர்த்தால் வையம் பேதமை அற்றிடும்"
"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்கும்"
"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தார்"
"பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா"
என்று பாடிச் சமூகத்தில் பெண்ணென்பவளை மனுஶியாகப் பாவித்தவன் பாரதி.
தொடரும்.................

சமூகம்

"பாரடா உனது மானிடப் பரப்பைப்
பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்
'என்குலம்'என்றுனைத் தன்னிடம் ஒட்டிய
மக்கட் பெருங்கடல் பார்த்து ம்கிழ்ச்சிகொள்!
அறிவை விரிவுசெய்; அகண்ட மாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
அணைத்துக் கொள்! உன்னை சங்கம மாக்கு!
மானிட சமுத்திரம் நானென்று கூவு!"

"இமய சாரலில் ஒருவன் இருமினால்
குமரியி லிருந்து மருந்துகொண்டு ஓடினான்."

கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல், சமூகம் இப்படி இருந்தது என்று
கூறுகிறார். கம்பன்


நான் படித்தவை.

மருத்துவம்



மயக்க மருந்து

நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையின்போது எதுவுமே தெரியாமலிருக்க
குளோரோ பார்ம் என்ற மயக்க மருந்து கொடுக்கப்படுறது. இந்த மருந்தை
கண்டுபிடித்தவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டாக்டர் 'ஜேம்ஸ் சிம்சன்'
என்ப வரார்.

நன்றி

தங்கமலர்

தொகுப்பு:-
கே.எஸ்.செல்வபுவனேஸ்வரி,விஜயாச்சம்பாடு.

தினம் ஒரு திருக்குறள் வேண்டுதல்

1.கடவுள் வாழ்த்து

4.வேண்டுதல் வேண்டாமை இலான்டி சேர்ந்தார்கு
யாண்டும் இடும்பை இல.

Tuesday, March 21, 2006

பொது அறிவு

அரை அடி குரங்கு
உலகின் மிகச் சிறிய குரங்கு எது தெரியுமா? டார்சியார் என்று அழைக்க படும் குரங்கு இனம். இது பெரிய மரங்களில் தான் வாழும் என்று நினைத்து விடாதீர்கள். சிறிய, மெலிந்த கிளையுள்ள் மரங்களில் கூட இந்த குரங்கினால் வசிக்க முடியும் காரணம், இதன் அரை அடி உயரம்தான். டார்சியர் குரங்கு தற்போது பிலிப்பைன்ஸ் காடுகளில் மட்டுமே காணப்படுகின்றன.
தினத்தந்திக்கு நன்றி

குறிப்புகள்

கூடங்குளம் அணுமின் நிலையக் கட்டுமானப் பணிகள் 80 விழுக்காடு
முடிவடைந்துவிட்டன.தொழில் நுட்ப்ப பணிகள் தற்போது தொடங்கப்
பட்டுள்ளன். 2007-ம் ஆண்டில் ஆணுமின் நிலையம் செயல்படத் துவங்கும்.
முதல் கட்டமாக 2000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்' என
திட்ட தொழில் நுட்ப இய்க்குநர் குவாசா அலெக்ஸாண்டர் தெரிவித்து
உள்ளார்.


ஆராய்ச்சி மேற் கொள்வதற்காக வெள்ளி கிரகத்திற்கு ஐரோப்பா விண்கலம்
அனுப்பியுள்ளது. ரஶ்யாவில் உள்ள பைக்கனூர் விண்வெளி மையத்திலிருந்து 09.11.2005 அன்று அனுப்பப்பட்டது. 'வீனஸ் எக்ஸ்பிரஸ்' என்றழைக்கப்படும்
இந்த விண்கலம் வெள்ளி கிரகத்தைச் சென்றடைய 153 நாட்கள் ஆகும்.
வெள்ளி கிரகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் முதல் விண்கலம் இது என்பது குறிப்பிடதக்கது.


வண்டலூர் உயிரியல் பூங்காவில் அனைத்து விலங்குகள் குறித்த
விவரங்களை இன்டர்நெட் மூலம் பார்க்க சிறப்பு வசதிகள் ய்யப்பட்டுள்ளன். இதற்காக உயிரியல் பூங்காவின் இணையதளம், டி.சி.எஸ். நிறுவனத்தின் உதவியுடன் முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.


நாட்டின் தொழில் நிறுவனங்களின் வளர்சிக்கு இடையூறாக இருக்கும் தடைக் கற்களை அகற்ற அரசு உறுதி பூண்டுள்ளது. அதே நேரத்தில் நாட்டிலுள்ள
ஏழை மக்களின் வாழ்க்கையையும் முன்னேற்றியாக வேண்டும். அப்போதுதான் தடையற்ற வளர்ச்சி பாதையில் செல்லமுடியும் என்று பிரமர் டாக்டர்.மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

Wednesday, March 15, 2006

திருக்குறள்

1.கடவுள் வாழ்த்து
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

கற்றதனால் ஆய பயன் என்கொல்,வாலறிவன்
நற்றாள் தொழொஅர் எனின்.

மலர்மிசை ஏகிளாள் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

வேண்டுதல் வேண்டாமை இலான்டி சேர்ந்தார்கு
யாண்டும் இடும்பை இல.

இருள்சேர் இருவினையும் சேரா: இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஓழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

தனக்குஒவமை இல்லாதவான் தான்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

அறஆழி அந்தணன் தான்சேர்ந்தாஇக்கு அல்லால்
பிறஆழி நீந்தல் அரிது.

கோள் இல்பொறியில் குணம் இலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர்,நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

2.வான் சிறப்பு

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுஉணரற் பாற்று.

துப்பார்க்குத் துப்புஆய துப்புஆக்கித் துப்பார்க்குத்
துப்பாஆய தூஉம் மழை.

வீண்இன்று பொய்ப்பீன் விரிநீர் வியனுலகத்து
உன்நின்று உடற்றும் பசி.

ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளம்குன்றிக் கால்.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றுஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றுஆங்கே
பசும்புல் தலைகாண்பது அரிது.

நெடும்கடலும் தன்நீர்மை குன்றும் தடித்துஎழிலி
தான்நல்காது ஆகி வீடின்.

சிறப்போடு பூசனை செல்லது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்காது எனின்.

நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.

3.நீத்தார் பெருமை

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுபத்து
வேண்டும் பனுவல் துணிவு.

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிகொண் டற்று.

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

உரனென்னும் தோட்டியான் ஒர்ஐந்தும் காப்பான்
வரன்என்னும் வைப்பிற்குஒர் வித்து.

ஐந்துஅறிவித்தாள் ஆற்றல் அகல்விசும்பு உளார்கோமான்
இந்திரனே சாலும் கரி.

செயற்குஅரிய செய்வார் பெரியார்:சிரியர்
செயற்குஅரிய செய்கலா தார்.

சுவைஒளி ஊறுஒசை நாற்றமென்னு ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

குணம்என்னும் குன்ஏறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டு ஒழுக லாள்.

4.அறன் வலியுறுத்தல்

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.

அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்குஇல்லை கேடு.

ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல்.

மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற.

அழுக்காறு அவாவெகுளி இன்னாசொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

அன்று அறிவாம் என்னாது அறம்செய்க:மற்றுஅது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

அறத்துஆறு இதுஎன வேண்டா:சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் ஆஃதுஒருவன்
வாழ்நாள் வழிஅடைக்கும் கல்.

அறத்தான் வருவதேஇன்பம் மற்று எல்லாம்
புறத்த புகழும் இல.

செயல்பாலது ஓரும் அறனே:ஒருவற்கு
உயற்பாலது ஒரும் பழி.

5.இல்வாழ்க்கை

இல்வாழ்வான் என்பான் இயல்புஉடைய மூவர்க்கும்
நல்ஆற்றின் நின்ற துணை.

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.

தென்புலத்தார், தெய்வம், விருந்துஒக்கல் தான்என்றுஆங்கு
ஐம்புலத்துஆறு ஒம்பல் தலை.

பழிஅஞ்சிப் பாத்துஊண் உடைத்துஆயின் வாழ்க்கை
வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

அன்பும் அறனும் உடைத்துஆயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

அறத்துஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்துஆற்றில்
போஒய்ப் பெறுவது எவன்.

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.

ஆற்றின் ஒழுக்கி, அறன்இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.

அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை ஆஃதும்
பிறன்பழுபது இல்லாயின் நன்று.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உரையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

6.வாழ்க்கைத் துணை நலம்.

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்கைத் துணை.

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின்,வாழ்க்கை
எனைமாட்சித்து ஆயினும் இல்.

இல்லதென் இல்லவள் மாணபானால்,உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.

பெண்ணின் பெருத்தக்க யாஉள,கற்புஎன்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதுஎழுவாள்
பெய்யெனப் பெய்யுன் மழை.

தற்காத்துத் தற்க்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்வுஇலான் பெண்.

சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழுன் உலகு.

புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.

மங்கலம் என்ப மனைமாட்சி;மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கள் பேறு.

7.மக்கட்பேறு

பெறுமவற்றுள் யாம்அறிவது இல்லை அறிவுஅறிந்த
மக்கள்பேறு அல்ல பிற.

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கள் பெறின்.

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையாள் வரும்.

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூள்.

மக்கள்மெய் தீண்டல் உடற்குஇன்பம்; மற்றுஅவர்
சொல்கேட்டல் இன்பம் செவிக்கு.

குழல்இனிது யாள்இனிது என்பதம் மக்கள்
மழலைசொல் கேளா தவர்.

தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

தம்மிள் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்உயிர்க்கு எல்லாம் இனிது.

ஈன்ற பொழுதின் பெரிதுஉவக்க்கும் தன்மகளைச்
சான்றோன் எனகேட்ட தாய்.

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொலெனும் சொல்.

8.அன்புடைமை

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

அன்புஇலார் எல்லாம் தமக்குரியர் அன்புஉடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

அன்போடு இயைந்த வழக்குஎன்ப;ஆர் உயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.

அன்புஈனும் ஆர்வம் உடைமை;அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.

அன்புஉற்று அமர்ந்த வழக்க்குஎன்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்;
மறத்திற்கும் அஃதே துணை.

என்பு இலதனை வெயில்போலக் காயுமே
அன்பு இலதனை அறம்.

அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்காண்
வற்றல் மரம்தளிர்த்து அற்று.

புறத்துஉறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துஉறுப்பு அன்பு இலவர்க்கு.

அன்பின் வழியது உயிர்நிலை;அஃதுஇலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

Tuesday, March 14, 2006

9.விருந்தோம்பல்


இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விந்துஓம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.

விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா
மருந்துஎனினும் வேண்டற்பாற்று அன்று.

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.

அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.

வித்தும் இடல்வேண்டும்,கொல்லோ விருந்துஓம்பி
மிச்சில் மிசைவான் புலம்.

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்துஇருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.

இனைத்துணைத்து என்பதுஒன்று இல்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.

பரிந்துஓம்பிப் பற்றுஅற்றேம் என்பர் விருந்துஓம்பி
வேள்வி தலைப்படா தார்.

உடைமையுள் இன்மை விருந்துஓம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.

மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

Thursday, March 02, 2006


Fine Friends open my eyes, Smart Friends open my mind but only sweet Friends Heart, Have a NICE day to ALL




AGE OF SONGS
1 to 8 : Anajali Anjali ...............
9 to 13 Enakoru Girl Friend ...........
14 to 25 Nam vayathuku vantho ........
26 to 40 Asai 100 vagai ...............
40 to 60 Enge Nimmathe ..........
Above 60 No songs Music only

JOKES ..............

Husband : Coffe Roba Stronga iruke enna pottae?
Wife : Oru spoon cement poten.

Wednesday, March 01, 2006


WECOME TO MY WEBSITE

BY
RAJAKUMAR.T