Friday, August 31, 2007

இரண்டில் ஒன்று சொல்லிவிடு

என்மனம் அவிழ்த்துகொட்டுகிறேன்
மூடிய உன் இதயத்தின் மீது
உன் மீது எனக்கிருக்கும் காதல்
என்மீது எனக்கில்லாமல் போனது
உன் விழிப்புன்னகையும்
இதழ் முறைப்பும்
எனக்கு விளங்கவில்லை
உன் இதயக்கல்லில்
தீட்டிய வார்தைகள் உனக்கு ஆயுதம்
என் மனம் எரிக்கும்
மௌனம் எனக்கு ஆயுதம்
என்னுள் கொதிக்கு
ம்உன்னை எப்படி தணிக்கபோகிறேன்
என் வலிகளுக்கு
நீ தரும் காயங்கள் ஆணியப்போகிறேன்
காதல் சொல்ல தவறினாலும்
என் கண்ணீர் உறிஞ்சத்தவறுவதில்லை நீ
இரண்டில் ஒன்று சொல்லிவிடு
என் காதலை ஏற்றுக்கொள் அல்லது
என் காதலை ஏற்றுக்கொள்

No comments: