Thursday, August 09, 2007

ஆறு வருட காதலும் ஆறுவரி கவிதையும்

பெண்ணே!
ஆறு வருடங்களுக்கு முன்பு...
உன்னை பார்த்த போது...
இழந்தேன் என் மனதை.

அதன் பின்...
இரவுகளில்...
இழந்தேன் என் தூக்கம்.

உன்னைப்பற்றி மட்டும்...
சிந்தித்தாதில்..
.இழந்தேன் என் கல்வி.

என்னிடம் முதன் முதல் நீ...
பேசிய போது...
இழந்தேன் என் மொழி.

நீ, இன்னொருவனை...
கல்யாணம் கட்டிய போது...
இழந்தேன் என் காதல்.

நீயும் என்னை...
காதலித்த போது...
இழந்தேன் என் துக்கம்.

இப்படி, உன்னாலே நான்..
இழந்தது பல பல..
இவை அதிலே ஒரு சில.

அன்பே!
என் கடைசி பரிசாக..
இந்த ஆறு வரிக் கவிதையை...
உனக்குத் தந்துவிட்டு...
இழந்திடவா என் உயிரை?

No comments: