எங்கெல்லாமோ
அலைந்து
திரிந்து
ஒன்றுக்கும் உதவாத மாமன்
அழைத்து வந்தான்
கிழவியின் சாவுக்கு
வாசிக்க - அதற்கான
மேளக்காரர்களை.
தானும் அவர்களுடன்
சாராயம் அருந்தி வந்து
மிக மிக சம்பிரதாயமாய்
அழுதான்.
இது எல்லாமே
அவனும் இறந்த நாளில்
நடந்தது.
நன்றி - கலாப்ரியா
No comments:
Post a Comment