Tuesday, September 11, 2007

உனக்காய்

உனக்காய் ஒரு கவிதை எழுத சொன்னாய்
யோசித்து யோசித்து கடைசியில்
உன் பெயர் எழுதித் தந்தேன்
பக்கம் பக்கமாய் உனக்காய் எழுதிய
கவிதைகளை படித்துவிட்டு
"யார நெனச்சு எழுதுன" என்று
கேட்கும் உன்னிடம் வேறு எதை
எழுதித் தருவது.....

இராஜவேல்

No comments: